About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 6

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யு பேதம் 
ரங்க நாதே தேவேன நித்யம் ஸமேதம்|
பக்தைஸ் ஸதா ஸாது கீதம் 
ஸ்வீய பக்தாய பார்த்தாய ஸம் ப்ரோக்த கீதம்||  

  • லக்ஷ்மீ - லட்சுமி தேவியுடனும்
  • ந்ருஸிம்ஹ - நரசிம்ம மூர்த்தியுடனும்
  • ஆத்யு பேதம் - முதன்மையாகக் கூடி இருப்பவர், லட்சுமி நரசிம்மராக எழுந்தருளியிருப்பவர்
  • ரங்கநாத - ரங்கநாதர் என்னும்
  • தேவேன - இறைவனுடன்
  • நித்யம் - எப்போதும்
  • ஸமேதம் - இணைந்து இருப்பவர்
  • பக்தைஸ் - பக்தர்களால்
  • ஸதா - எப்போதும்
  • ஸாது - அழகாக, நன்முறையில்
  • கீதம் - புகழப் பாடுபவர்
  • ஸ்வீய - தன்னுடைய
  • பக்தாய - பக்தனான
  • பார்த்தாய - அர்ஜுனனுக்கு
  • ஸம்ப்ரோக்த - உபதேசிக்கப்பட்ட
  • கீதம் - பகவத் கீதையாக இருப்பவர்

ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீ ரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment