About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்லோகம் 7

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

7. பக்தயா க்ருதம் ஸதோத்ர ரத்னம் 
தீக்ஷி தானந்த ராமேண ஸர்வார்த்த ஸித்யை|
நித்யம் படேத் பக்தி சாயீ 
வாஸுதேவ ப்ரஸாதோ பவே தேவ தஸ்ய||  

  • பக்தயா - பக்தியுடன்
  • க்ருதம் - செய்யப்பட்ட, இயற்றப்பட்ட
  • ஸ்தோத்ர - துதிப்பாடலாகிய, ஸ்தோத்திரமாகிய
  • ரத்னம் - ரத்தினம், மணி 
  • தீக்ஷித - தீக்ஷிதர் மற்றும்
  • ஆனந்த ராமேண - ஆனந்த ராமன் என்பவரால்
  • ஸர்வார்த்த - எல்லா விதமான நன்மைகளும், எல்லாப் பேறுகளும்
  • ஸித்யை - சித்திப்பதற்கோக, கிடைப்பதற்காக 
  • நித்யம் - தினமும், நாள்தோறும்
  • படேத் - படிப்பவர் எவரோ
  • பக்தி - பக்தி கொண்ட
  • சாயீ - பக்தர்
  • வாஸுதேவ - வாசுதேவனுடைய, இறைவனுடைய 
  • ப்ரஸாதோ - அருள், அனுக்கிரம்
  • பவேத் - உண்டாகும்
  • ஏவ - நிச்சயமாக
  • தஸ்ய - அவருக்கு

தீக்ஷிதர் மற்றும் ஆனந்த ராமன் ஆகியோரால் எல்லாப் பேறுகளும் சித்திப்பதற்காக பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திர ரத்தினத்தை, பக்தி கொண்ட பக்தர் எவர் தினமும் படிக்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இறைவனின், வாசுதேவனின்,  ஸ்ரீ பார்த்தசாரதியின் அருள் உண்டாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment