About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 20 August 2026

ஸ்ரீ கஜ³ லக்ஷ்மி ஸ்லோகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

இவளே ராஜலக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திர லோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்று பெயர். நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நில மகளாகிய இலக்குமியின் மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். கஜலக்ஷ்மியை ராஜலக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி எனவும் அழைப்பர். கஜலக்ஷ்மியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.

ஜய ஜய து³ர் க³தி நாஸி²னி காமினி
ஸர்வ ப²லப்ரத³ ஸா²ஸ்த்ர மயே
ரத⁴ கஜ³ துரக³ பதா³தி ஸமாவ்ருத
பரிஜன மண்டி³த லோக நுதே|
ஹரி ஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாப நிவாரிணி பாத³ யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி
கஜ³ லக்ஷ்மீ ரூபேண ஸதா³ பாலய மாம்||

  • ஜய ஜய - வெற்றி உண்டாகட்டும், வெற்றி உண்டாகட்டும்
  • து³ர் க³தி நாஸி²னி - துன்பங்களையும் வறுமையையும் அழிப்பவளே
  • காமினி - மங்களகரமானவளே, நல்விருப்பங்களை அளிப்பவளே
  • ஸர்வ ப²லப்ரத³ - எல்லாவகை நற்பலன்களையும் தருபவளே
  • ஸா²ஸ்திர மயே - சாஸ்திரங்களின் வடிவமாக விளங்குபவளே
  • ரத⁴ கஜ³ துரக³ பதா³தி - தேர், யானை, குதிரை, காலாட்படை ஆகிய நால்வகைச் சேனைகளுடனும்
  • ஸமாவ்ருத - சூழப்பட்டவளே
  • பரிஜன - ஏவலர்கள் மற்றும் சுற்றத்தாருடன்
  • மண்டி³த - அலங்காரமாக வீற்றிருப்பவளே
  • லோக நுதே - உலக மக்கள் யாவராலும் துதிக்கப்படுபவளே
  • ஹரி ஹர ப்³ரஹ்ம - விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய முமூர்த்திகளாலும்
  • ஸுபூஜித - மிகச் சிறப்பாக வழிபடப்படுபவளே
  • ஸேவித - பக்தியுடன் வணங்கப்படுபவளே
  • தாப நிவாரிணி - மனக் கவலைகளையும் உலகத் துன்பங்களையும் நீக்குபவளே
  • பாத³ யுதே - அத்தகைய போற்றத்தக்க திருவடிகளைக் கொண்டவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • கஜ³ லக்ஷ்மீ ரூபேண - கஜலட்சுமி தேவியின் வடிவத்தில் எழுந்தருளி இருப்பவளே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழை பொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினை உடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டி கஜ லக்ஷ்மியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாக இருக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment