ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி
து³ந்து⁴பி⁴ நாத³ ஸுபூர்ண மயே
கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம
ஸ²ங்க³ நினாத³ ஸுவாத்³ய நுதே|
வேத³ பூராணே திஹாஸ ஸு பூஜித
வைதி³க மார்க³ ப்ரத³ர்ஸ² யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
த⁴ன லக்ஷ்மி ரூபேணா ஸதா³ பாலய மாம்||
- தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி - நடனத்தின் தாள ஒலிகள்
- து³ந்து⁴பி⁴ - துந்துபி எனப்படும் ஒரு வகையான பெரிய முரசு, பேரிகை வாத்தியம்
- நாத³ - ஓசையினால்
- ஸுபூர்ண மயே - நிறைந்திருப்பவளே
- கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம - ஒலிக்கின்ற கெஜையின், சலங்கையின் ஓசைகள்
- ஸ²ங்க³ - சங்கின்
- நினாத³ - முழக்கத்தோடும்
- ஸு வாத்³ய நுதே - மங்களகரமான பிற இசைக்கருவிகளின் ஒலியோடும் துதிக்கப்படுபவளே
- வேத³ - வேதங்களாலும்
- பூராண - புராணங்களாலும்
- இதிஹாஸ - இதிகாசங்களாலும்
- ஸு பூஜித - மிகச் சிறப்பாக வழிபடப்படுபவளே
- வைதி³க - வேத நெறியான
- மார்க³ - நல்வழியை
- ப்ரத³ர்ஸ² யுதே - வழிகாட்டுபவளே
- ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
- மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
- த⁴ன லக்ஷ்மி ரூபேணா - தனலட்சுமி வடிவில் இருப்பவளே
- ஸதா³ - எப்போதும்
- பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக
‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீ தன லக்ஷ்மி அருள் புரிவாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment