About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.5

வ்யாஸ உவாச!
அஸ்த் யேவ மே ஸர்வமித³ம் த்வயோக்தம்
ததா²பி நாத்மா பரிதுஷ்யதே மே| 
தந் மூல மவ்யக்த மகா³த⁴ போ³த⁴ம்
ப்ருச்சா² மஹே த்வாத் மப⁴வாத்ம பூ⁴தம்||

  • வ்யாஸ உவாச - வியாசர் கூறினார்
  • த்வயா உக்தம் - உம்மால் சொல்லப்பட்ட
  • இத³ம் ஸர்வம் - மேற்கூறிய யாவும்
  • மே அஸ்தி ஏவ - எனக்கு பொருத்தமே
  • ததா² அபி - ஆன போதிலும்
  • மே ஆத்மா - எனது மனமானது
  • ந பரிதுஷ்யதே - மகிழ்ச்சி அடையவில்லை
  • ஹே - ஹே பிரபு!
  • அவ் யக்தம் - நன்கு புலப்படாத
  • தந் மூலம் - அந்த விசனத்திற்கு காரணமானதை
  • ஆத் ம பா⁴வாத்ம பூ⁴தம் - பிரம்ம புத்திரரும்
  • ஆகா³த⁴ போ³த⁴ம் - ஆழ்ந்த அறிவை உடையவருமான
  • த்வா - தங்களை
  • ப்ருச்சா²ம - கேட்கிறேன்

ஸ்ரீ வியாச தேவர் கூறினார்: நாரதரே! நீங்கள் என்னைப் பற்றிச் சொன்னது அனைத்தும் முற்றிலும் சரி. இவை அனைத்தையும் மீறி, என் மனம் அமைதி பெறவில்லை; மகிழவில்லை; காரணமும் தெரியவில்லை. எனவே, எனது அதிருப்திக்கான மூல காரணம் குறித்து நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். ஏனெனில் நீங்கள் இலௌகீக தந்தை மற்றும் தாய் இல்லாமல்,  சுயமாகப் பிறந்த, பிரம்மாவின் வரம் பற்ற ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment