About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.82

தாமுவாச ததோ ராம: 
பருஷம் ஜநஸம்ஸதி³|
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா 
விவேஸ² ஜ்வலநம் ஸதீ|| 

  • ததோ - பிறகு
  • தாம் - அவளைப் பார்த்து
  • ஜநஸம்ஸதி³ -  ஜன சபையில்
  • பருஷம் -  கொடுமையான வார்த்தையை
  • ராம: - ஸ்ரீராமர்
  • உவாச - சொன்னார்
  • ஸதீ  - பதிவ்ரதையான
  • ஸா ஸீதா - அந்த ஸீதை
  • அம்ருஷ்யமாணா - அந்தக் கொடிய வார்த்தைகளை ஸஹிக்க முடியாதவளாய்
  • ஜ்வலநம் -  அக்னியில்
  • விவேஸ² -  ப்ரவேசித்தாள்

அப்போது ஸ்ரீராமர், மக்கள் கூட்டத்தின் முன்பு அவளிடம் கடுமையாகப் பேசினார். கணவனிடம் அர்ப்பணிப்பு மிக்கச் சீதை, ஸ்ரீராமரின் சொற்களைப் பொறாமல் எரியும் தழலுக்குள் புகுந்தாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment