About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.13 

யஜ்ஞ ஸி²ஷ்டாஸி² ந: ஸந்தோ 
முச்யந்தே ஸர்வ கில்பி³ஷை:|
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா: 
யே பசந்த் யாத்ம காரணாத்||

  • யஜ்ஞ ஸி²ஷ்ட - யாக மீதியை  
  • அஸி²நஸ் - உண்போர் 
  • ஸந்தோ - பக்தர்கள் 
  • முச்யந்தே - விடுபடுகின்றனர் 
  • ஸர்வ - எல்லாவிதமான 
  • கில்பி³ஷைஹி - பாவங்களிலிருந்து 
  • பு⁴ஞ்ஜதே - அனுபவிக்கும் 
  • தே - அவர்கள் 
  • து - ஆனால் 
  • அக⁴ம் - கொடிய பாவங்கள்  
  • பாபாஹ - பாவிகள் 
  • யே - யார் 
  • பசந்தி - உணவு தயாரிப்பவர் 
  • ஆத்ம காரணாத் - புலனின்பத்திற்காக

யாக மீதியை உண்ணும் பக்தர்கள் தாங்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால், யார் புலனின்பத்திற்காக உணவு தயாரிக்கிறார்களோ அவர்கள் கொடிய பாவங்களை அனுபவிக்கும் பாவிகள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment