About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

திவ்ய ப்ரபந்தம் - 125 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 125 - பரதனுக்கு நாடு கொடுத்தவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

கொங்கை வன்* கூனி சொற் கொண்டு* 
குவலயத் துங்கக் கரியும்* 
பரியும் இராச்சியமும்* 
எங்கும் பரதற்கு அருளி* வன் கான் அடை* 
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • கொங்கை - முதுகில் முலையெழும்பினாற் போன்ற
  • வல் - பலிஷ்டமான
  • கூனி - கூனை யுடையளான மந்தரையினுடைய
  • சொல் - சொல்லை
  • கொண்டு - அங்கீகரித்து
  • எங்கும் - எல்லாவிடங்களிலுமுள்ள
  • குவலயம் துங்கம் - இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
  • கரியும் - யானைகளையும்
  • பரியும் - அங்ஙனொத்த குதிரைகளையும்
  • இராச்சியமும் - ராஜ்யத்தையும்
  • பரதற்கு - பரதாழ்வானுக்கு
  • அருளி - கொடுத்து விடல்
  • வல் கான் அடை - கொடிய காட்டை அடைந்த
  • அம் கண்ணன் - அழகிய கண்ணையுடையனான இவன்
  • அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

முதுகில் முலை முளைத்தாற் போலிருந்த கூனி மந்தரையின் சொல்லிற்கு இணங்க தனது இருப்பிலிருந்த சிறந்த யானைகள், குதிரைகள் மற்றும் ராஜ்யத்தை பரதனுக்கு தந்தருளி கொடிய காட்டிற்கு சென்ற அழகிய கண்களைக் கொண்டவன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்! இராமனும், கண்ணனும் வேறல்ல என்று காட்டும் பாசுரம் இது 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment