About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 5

ஜந்மாத்³ யஸ்ய யதோ² அந்வயாத்³ 
இதரத: சார்தே²ஸ்²வ அபி⁴ஜ்ஞஹ ஸ்வராத்|
தேநே ப்³ரஹ்ம  ஹ்ருதா³ய 
ஆதி³ கவயே முஹ்யந்தி யத் ஸூ²ரய:||
தேஜோ வாரி ம்ருதா³ம் யதா² 
விநிமயோ யத்ர த்ரி ஸர்கோ³ அம்ருஷா|
தா⁴ம்நா ஸ்வேந ஸதா³ நிரஸ்த 
குஹகம் சத்யம் பரம் தீ⁴மஹி||

  • ஜந்ம - பிறப்பு
  • ஆதி³ - முதலியவை
  • அஸ்ய - இந்தப் பிரபஞ்சத்தின்
  • தோ² - எதிலிருந்து
  • ந்வயாத்³ - நேரடியாகவும், தொடர்பினாலும்
  • இதரதஸ் - வேறுவிதமாகவும், மறைமுகமாகவும்
  • அர்த்தே²ஸ்²வ - பொருட்கள் மற்றும் விஷயங்களில்
  • அபி⁴ஜ்ஞஹ - அனைத்தையும் அறிந்தவர்
  • ஸ்வராத் - முழுமையான சுதந்திரம் உடையவர்
  • தேநே - அவரால்
  • ப்³ரஹ்ம - வேத ஞானம்
  • ஹ்ருதா³ய - இதயத்தில்
  • ஆதி³ கவயே - முதல் படைப்பாளியான பிரம்மாவுக்கு
  • முஹ்யந்தி - குழப்பமடைகின்றனர்
  • யத் - எதனால்
  • ஸூ²ரயஹ் - பெரிய ஞானிகள்
  • தேஜோ - நெருப்பு, ஒளி
  • வாரி - நீர்
  • ம்ருதா³ம் - மண்
  • யதா² - எவ்வாறு
  • விநிமயோ - தோற்ற மாறுபாடு, பரிமாற்றம்
  • யத்ர - எதில்
  • த்ரி - மூன்று
  • ஸர்கோ³ - படைப்பு
  • அம்ருஷா - நிலையற்றது, மாயையானது
  • தா⁴ம்நா - தமது பேரொளியால்
  • ஸ்வேந - தன்னிலேயே விளங்குகின்ற
  • ஸதா³ - எப்போதும்
  • நிரஸ்த - அகற்றப்பட்ட
  • குஹகம் - மாயை, கபடம், இருள்
  • சத்யம் - உண்மை
  • பரம் - உயர்ந்த, பரமமான
  • தீ⁴மஹி - தியானிக்கிறோம்

இந்தப் பிரபஞ்சத்தின் பிறப்பு, நிலை, அழிவு முதலிய அனைத்தும் எதிலிருந்து தோன்றுகின்றனவோ, அந்தப் பரம்பொருள் அனைத்தையும் அறிந்தவரும், முழுமையான சுதந்திரம் உடையவருமாவார். அந்தப் பரம்பொருள், முதல் படைப்பாளியான பிரம்மாவின் இதயத்தில் வேத ஞானத்தை அருளினார். ஆனால் அந்தப் பரம்பொருளின் உண்மையான மாயை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் பெரிய ஞானிகள்கூட சில சமயம் குழப்பமடைகின்றனர். நெருப்பு, நீர், மண் போன்ற பொருட்கள் ஒன்றின் தன்மையை மற்றொன்று பிரதிபலிப்பது போலத் தோன்றுவது போலவும், மூன்று குணங்களால் உருவான இந்தப் பிரபஞ்சப் படைப்பு நிலையற்றதாகவும் மாயையானதாகவும் இருக்கிறது. தமது பேரொளியால் மாயையும் அறியாமையும் முற்றிலும் அகற்றப்பட்டு, எப்போதும் தன்னிலேயே பிரகாசிக்கும் பரம சத்தியமான இறைவனை நாம் தியானிக்கிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 4

ப⁴கவந் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ 
ஸர்வஸ்ய விக்³ரஹம்|
ஸ்ரீமத் போதே³ந்த்³ர யோகே³ந்த்³ர 
தேஸீ கேந்த்³ரம் உபாஸ்மஹே||
ப்ரஹ்லாத³ நாரத³ பராஸர புண்ட³ரீக வ்யாஸ 
அம்ப⁴ரீஷ ஸு²க ஸௌநக பீ⁴ஸ்²ம தா³ல்ப்⁴யாந்|
ருக்மாங்க³த அர்ஜுந வஸி²ஸ்²ட விபீ⁴ஸ²நாதீ³ந் 
புன்யாநிமாந் பரம பா⁴க³வதாந் ஸ்மராமி||

  • ப⁴கவந் - இறைவன்
  • நாம - திருநாமம்
  • ஸாம்ராஜ்ய - பேரரசு, அரசாட்சி
  • லக்ஷ்மீ - செல்வம், வளம்
  • ஸர்வஸ்ய - எல்லாவற்றிற்கும், அனைத்தினுடைய
  • விக்³ரஹம் - வடிவம், உருவம்
  • ஸ்ரீமத் - சிறப்பு மிக்க, திருவுடைய
  • போதே³ந்த்³ர - போதேந்திரர்
  • யோகே³ந்த்³ர - யோகிகளுள் சிறந்தவர்
  • தேஸீ கேந்த்³ரம் - ஆசாரியர்களுள் சிறந்தவர்
  • உபாஸ்மஹே - நாம் வழிபடுகிறோம், தியானிக்கிறோம்
  • ப்ரஹ்லாத³ - பிரகலாதர்
  • நாரத³ - நாரதர்
  • பராஸர - பராசரர்
  • புண்ட³ரீக - புண்டரீகர்
  • வ்யாஸ - வியாசர்
  • அம்பரீஷ - அம்பரீஷர்
  • ஸு²க - சுகர்
  • ஸௌநக - சௌனகர்
  • பீ⁴ஸ்²ம - பீஷ்மர்
  • தா³ல்ப்⁴யாந் - தால்பியர்
  • ருக்மாங்க³த - ருக்மாங்கதர்
  • அர்ஜு - அர்ஜுனர்
  • வஸி²ஸ்²ட - வசிஷ்டர்
  • விபீ⁴ஸ²ந - விபீஷணர்
  • தீ³ந் - முதலானவர்களை, போன்றவர்களை
  • புன்யாந் - புண்ணியம் நிறைந்த
  • இமாந் - இவர்களை, இத்தகையவர்களை
  • பரம - உயர்ந்த, மிகச் சிறந்த
  • பா⁴க³வதாந் - இறைவனுடைய சிறந்த பக்தர்களை
  • ஸ்மராமி - நான் நினைக்கிறேன், நினைவு கூர்கிறேன்

இறைவனுடைய திருநாமம் என்னும் பேரரசின் செல்வமாகவும், அனைத்திற்கும் உருவமாகவும் விளங்குபவர். சிறப்புமிக்க போதேந்திரரை, யோகிகளிலும் ஆசாரியர்களிலும் சிறந்தவராகக் கருதி நாம் வழிபடுகிறோம். பிரகலாதர், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாசர், அம்பரீஷர், சுகர், சௌனகர், பீஷ்மர், தால்பியர், ருக்மாங்கதர், அர்ஜுனர், வசிஷ்டர், விபீஷணர் முதலான உயர்ந்த பாகவதர்களை நான் நினைவு கூர்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 3

ஸ்ரீகாந்தோ மாதுலோ 
யஸ்ய ஜனனீ ஸர்வ மங்களா|
ஜநக: ஸ²ங்கரோ தே³வ: 
தம் வந்தே³ குஞ்ஜராநநம்||

  • ஸ்ரீகாந்தோ - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
  • மாதுலோ - தாய்மாமன்
  • யஸ்ய - யாருக்கு, அவருக்கு
  • ஜனனீ - தாய்
  • ஸர்வ - அனைத்து
  • மங்களா - மங்களத்தைத் தருபவள், மங்களமானவள்
  • ஜநகஸ் - தந்தை
  • ஸ²ங்கரோ - சிவபெருமான்
  • தே³வ - கடவுள்
  • தம் - அவரை
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • குஞ்ஜர் - யானை
  • நநம் - முகம்

மகாவிஷ்ணு யாருக்குத் தாய்மாமனாகவும், ஸர்வமங்களா தாயாகவும், சிவபெருமான் தந்தையாகவும் இருக்கிறாரோ, யானை முகம் கொண்ட அந்த விநாயகரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 2

ரமாபதி பதாம் போ⁴ஜ 
பரிஸ் புரித மாஸம்|
ஸேநாபதிம் அஹம் வந்தே⁴ 
விச்வக்ஷேனம் நிரந்தரம்||

  • ரமாபதி - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
  • பதாம் - திருவடிகளின்
  • போஜ - தாமரை
  • பரிஸ்புரித - ஒளிர்கின்ற, பிரகா, க்கின்ற
  • மாஸம் - மனம் உடையவர்
  • ஸேநாபதிம் - சேனையின் தலைவரை
  • அஹம் - நான்
  • வந்தே - வணங்குகிறேன்
  • விச்வக்ஷேனம் - விஷ்வக்சேனர் என்ற திருநாமம் கொண்டவரை
  • நிரந்தரம் - எப்போதும், இடைவிடாமல்

திருமகளின் கணவரான மகாவிஷ்ணுவின் தாமரை போன்ற திருவடிகளில் மனதை நிலைநிறுத்தி இருப்பவரும், சேனையின் தலைவருமான விஷ்வக்சேனரை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்