About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 6

த⁴ர்ம ப்ரோஜ்ஜித² கைதவோ த்ர 
பரமோ நிர்மத் ஸராநாம் ஸதாம்|
வேத்⁴யம் வாஸ்தவ மத்ர வஸ்து 
ஸி²வதம் தாப த்ரயோன் மூலனம்||
ஸ்ரீமத் பா⁴க³வதே மஹா முனி க்ருதே 
கிம் வா பரைரீஸ்²வர:|
ஸத்யோ ஹ்ருத்⁴ ய வ்ருத்⁴யதே அத்ர 
க்ருதிபி: ஸூ²ஸ்²ரூஷிபி⁴ஸ் தத் க்ஷணாத்||

  • த⁴ர்ம - தர்மம், அறம்
  • ப்ரோஜ்ஜித² - முற்றிலும் நீக்கப்பட்ட
  • கைதவ - வஞ்சனை, கபடம்
  • அத்ர - இதில், இந்நூலில்
  • பரமோ - உயர்ந்த, சிறந்த
  • நிர்மத் ஸராநாம் - பொறாமையற்றவர்களுடைய
  • ஸதாம் - நல்லோர், சாதுக்கள்
  • வேத்⁴யம் - அறியப்பட வேண்டியது
  • வாஸ்தவம் - உண்மையான, மெய்யான
  • அத்ர - இதில்
  • வஸ்து - பொருள், பரம் பொருள்
  • ஸி²வதம் - மங்களத்தை அளிப்பது
  • தாப த்ரயோன் - மூன்று வகையான துன்பங்கள் (ஆத்யாத்மிகம் – உடல் மற்றும் மனத்தால் ஏற்படும் துன்பம், ஆதிபௌதிகம் – பிற உயிர்களால் ஏற்படும் துன்பம், ஆதிதைவிகம் – இயற்கை அல்லது தெய்வீக காரணங்களால் ஏற்படும் துன்பம்)
  • மூலனம் - வேரோடு அகற்றுதல்
  • ஸ்ரீமத் - சிறப்பும் மகிமையும் உடைய
  • பா⁴க³வதே - பாகவதத்தில்
  • மஹா - பெரிய, உயர்ந்த
  • முனி - முனிவர்
  • க்ருதே - இயற்றிய
  • கிம் வா - வேறு எதற்கு?
  • பரைர் - மற்ற நூல்களால்
  • ஈஸ்²வரஸ் - இறைவன், பரம்பொருள்
  • ஸத்யோ - உடனே
  • ஹ்ருத்⁴ய - இதயத்தில்
  • வ்ருத்⁴யதே - நிலைபெறுகிறது
  • அத்ர - இதில்
  • க்ருதிபிஸ் - புண்ணியம் செய்தவர்களால், தகுதியுடையவர்களால்
  • ஸூ²ஸ்²ரூஷிபி⁴ஸ் - கேட்க விரும்புபவர்களால்
  • தத் க்ஷணாத் - அந்தக் கணமே

வஞ்சனையும் கபடமும் முற்றிலும் நீக்கப்பட்ட இந்த நூல், பொறாமையற்ற நல்லோருக்கான உயர்ந்த ஞானத்தை எடுத்துரைக்கிறது. அது மங்களத்தை அளித்து, மூன்று வகையான துன்பங்களையும் வேரோடு அகற்றுகிறது. மகா முனிவரால் இயற்றப்பட்ட இந்த ஸ்ரீமத் பாகவதம் இருக்கும்போது, வேறு நூல்கள் எதற்குத் தேவை?  இந்த பாகவதத்தை பக்தியுடன் கேட்க விரும்பும் தகுதியானவர்களின் இதயத்தில், இறைவன் அந்தக் கணமே நிலைபெறுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment