About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 7

நிக³ம கல்ப தரோர் க³ளிதம் ப⁴லம் 
ஸுகமுகாத்³ அம்ருத த்³ரவ ஸம்யுதம்|
பிப³த பா⁴க³வதம் ரஸம் ஆலயம் 
முஹுர் அஹோ ரஸிகா பு⁴வி பா⁴விகா:||

  • நிக³ம - வேதங்கள்
  • கல்ப தரோர் - கற்பக மரம்
  • க³ளிதம் - கிடைத்த, பழுத்த
  • ப⁴லம் - பழம்
  • ஸுகமுகாத்³ - சுகதேவரின் வாயிலிருந்து
  • அம்ருத - அமுதம் போன்ற
  • த்³ரவ - திரவமான, சாறாகிய
  • ஸம்யுதம் - சேர்ந்த, நிறைந்த
  • பிப³த - பருகுங்கள்
  • பா⁴க³வதம் - பாகவதத்தை
  • ரஸம் - இனிய ரசம், சுவை
  • ஆலயம் - இருப்பிடம், நிலையம்
  • முஹுர் - மீண்டும் மீண்டும்
  • அஹோ - ஓ!, ஆகா!
  • ரஸிகா - ரசத்தை அனுபவிப்பவர்களே
  • பு⁴வி - உலகில்
  • பா⁴விகாஹ - உணர்வுள்ளவர்களே, நற்பேறு பெற்றவர்களே

வேதமாகிய கற்பக மரத்தில் பழுத்த பழம் போன்றதும், சுகதேவரின் வாயிலிருந்து வெளிப்பட்ட அமுதச் சாறுடன் நிறைந்ததுமான பாகவதத்தை, இனிய பக்தி ரசத்தை அனுபவிக்கும் உணர்வுள்ளவர்களே, இந்த உலகில் மீண்டும் மீண்டும் பருகுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment