About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 3

ஸ்ரீகாந்தோ மாதுலோ 
யஸ்ய ஜனனீ ஸர்வ மங்களா|
ஜநக: ஸ²ங்கரோ தே³வ: 
தம் வந்தே³ குஞ்ஜராநநம்||

  • ஸ்ரீகாந்தோ - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
  • மாதுலோ - தாய்மாமன்
  • யஸ்ய - யாருக்கு, அவருக்கு
  • ஜனனீ - தாய்
  • ஸர்வ - அனைத்து
  • மங்களா - மங்களத்தைத் தருபவள், மங்களமானவள்
  • ஜநகஸ் - தந்தை
  • ஸ²ங்கரோ - சிவபெருமான்
  • தே³வ - கடவுள்
  • தம் - அவரை
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • குஞ்ஜர் - யானை
  • நநம் - முகம்

மகாவிஷ்ணு யாருக்குத் தாய்மாமனாகவும், ஸர்வமங்களா தாயாகவும், சிவபெருமான் தந்தையாகவும் இருக்கிறாரோ, யானை முகம் கொண்ட அந்த விநாயகரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment