||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 4
ப⁴கவந் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ
ஸர்வஸ்ய விக்³ரஹம்|
ஸ்ரீமத் போதே³ந்த்³ர யோகே³ந்த்³ர
தேஸீ கேந்த்³ரம் உபாஸ்மஹே||
ப்ரஹ்லாத³ நாரத³ பராஸர புண்ட³ரீக வ்யாஸ
அம்ப⁴ரீஷ ஸு²க ஸௌநக பீ⁴ஸ்²ம தா³ல்ப்⁴யாந்|
ருக்மாங்க³த அர்ஜுந வஸி²ஸ்²ட விபீ⁴ஸ²நாதீ³ந்
புன்யாநிமாந் பரம பா⁴க³வதாந் ஸ்மராமி||
- ப⁴கவந் - இறைவன்
- நாம - திருநாமம்
- ஸாம்ராஜ்ய - பேரரசு, அரசாட்சி
- லக்ஷ்மீ - செல்வம், வளம்
- ஸர்வஸ்ய - எல்லாவற்றிற்கும், அனைத்தினுடைய
- விக்³ரஹம் - வடிவம், உருவம்
- ஸ்ரீமத் - சிறப்பு மிக்க, திருவுடைய
- போதே³ந்த்³ர - போதேந்திரர்
- யோகே³ந்த்³ர - யோகிகளுள் சிறந்தவர்
- தேஸீ கேந்த்³ரம் - ஆசாரியர்களுள் சிறந்தவர்
- உபாஸ்மஹே - நாம் வழிபடுகிறோம், தியானிக்கிறோம்
- ப்ரஹ்லாத³ - பிரகலாதர்
- நாரத³ - நாரதர்
- பராஸர - பராசரர்
- புண்ட³ரீக - புண்டரீகர்
- வ்யாஸ - வியாசர்
- அம்ப⁴ரீஷ - அம்பரீஷர்
- ஸு²க - சுகர்
- ஸௌநக - சௌனகர்
- பீ⁴ஸ்²ம - பீஷ்மர்
- தா³ல்ப்⁴யாந் - தால்பியர்
- ருக்மாங்க³த - ருக்மாங்கதர்
- அர்ஜுந - அர்ஜுனர்
- வஸி²ஸ்²ட - வசிஷ்டர்
- விபீ⁴ஸ²ந - விபீஷணர்
- ஆதீ³ந் - முதலானவர்களை, போன்றவர்களை
- புன்யாந் - புண்ணியம் நிறைந்த
- இமாந் - இவர்களை, இத்தகையவர்களை
- பரம - உயர்ந்த, மிகச் சிறந்த
- பா⁴க³வதாந் - இறைவனுடைய சிறந்த பக்தர்களை
- ஸ்மராமி - நான் நினைக்கிறேன், நினைவு கூர்கிறேன்
இறைவனுடைய திருநாமம் என்னும் பேரரசின் செல்வமாகவும், அனைத்திற்கும் உருவமாகவும் விளங்குபவர். சிறப்புமிக்க போதேந்திரரை, யோகிகளிலும் ஆசாரியர்களிலும் சிறந்தவராகக் கருதி நாம் வழிபடுகிறோம். பிரகலாதர், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாசர், அம்பரீஷர், சுகர், சௌனகர், பீஷ்மர், தால்பியர், ருக்மாங்கதர், அர்ஜுனர், வசிஷ்டர், விபீஷணர் முதலான உயர்ந்த பாகவதர்களை நான் நினைவு கூர்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment