||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 8
யம் ப்ரவ்ரஜந்தம் அநுபேதம் அபேத க்ருத்யம்
த்³வை பாயநோ விரஹ காதர அஜுஹாவ|
புத்ரேதி தன் மய தயா தரவோ பி⁴நேது:
தம் ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் முநிம் ஆநதோஸ்மி||
- யம் - யாரை
- பிரவ்ரஜந்தம் - இல்லறத்தைத் துறந்து செல்பவரை
- அநுபேதம் - பின்தொடர்ந்து செல்பவரை
- அபேத - பிரிவை அறியாத
- க்ருத்யம் - கடமையைச் செய்தவரை
- த்³வை பாயநோ - வியாசர்
- விரஹ - பிரிவு
- காதர - வருத்தமடைந்த
- ஆஜுஹாவ - அழைத்தார்
- புத்ர - மகனே
- இதி - என்று
- தன் மய - ஒன்றிய
- தயா - இரக்கத்தால்
- தரவோ - மரங்களே
- அபி⁴நேதுஹு - எதிரொலித்தன, பதிலளித்தன
- தம் - அந்த
- ஸர்வ - எல்லா
- பூ⁴த - உயிர்களின்
- ஹ்ருத³யம் - இதயம்
- முநிம் - முனிவரை
- ஆநதோஸ்மி - வணங்குகிறேன்
இல்லறத்தைத் துறந்து சென்ற மகன் சுகதேவரைப் பிரிந்த துயரத்தில் வியாசர், “மகனே!” என்று அழைத்தார். அதற்கு இரக்கமுற்ற மரங்கள் கூட எதிரொலியாக “மகனே” என்று பதிலளித்தன. எல்லா உயிர்களின் இதயத்திலும் உறையும் அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment