About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 8

யம் ப்ரவ்ரஜந்தம் அநுபேதம் அபேத க்ருத்யம் 
த்³வை பாயநோ விரஹ காதர அஜுஹாவ|
புத்ரேதி தன் மய தயா தரவோ பி⁴நேது: 
தம் ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் முநிம் ஆநதோஸ்மி||

  • யம் - யாரை
  • பிரவ்ரஜந்தம் - இல்லறத்தைத் துறந்து செல்பவரை
  • அநுபேதம் - பின்தொடர்ந்து செல்பவரை
  • அபேத - பிரிவை அறியாத
  • க்ருத்யம் - கடமையைச் செய்தவரை
  • த்³வை பாயநோ - வியாசர்
  • விரஹ - பிரிவு
  • காதர - வருத்தமடைந்த
  • ஆஜுஹாவ - அழைத்தார்
  • புத்ர - மகனே
  • இதி - என்று
  • தன் மய - ஒன்றிய
  • தயா - இரக்கத்தால்
  • தரவோ - மரங்களே
  • அபி⁴நேதுஹு - எதிரொலித்தன, பதிலளித்தன
  • தம் - அந்த
  • ஸர்வ - எல்லா
  • பூ⁴த - உயிர்களின்
  • ஹ்ருத³யம் - இதயம்
  • முநிம் - முனிவரை
  • ஆநதோஸ்மி - வணங்குகிறேன்

இல்லறத்தைத் துறந்து சென்ற மகன் சுகதேவரைப் பிரிந்த துயரத்தில் வியாசர், “மகனே!” என்று அழைத்தார். அதற்கு இரக்கமுற்ற மரங்கள் கூட எதிரொலியாக “மகனே” என்று பதிலளித்தன. எல்லா உயிர்களின் இதயத்திலும் உறையும் அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment