About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ மதுராஷ்டகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • கீ³தம் - அவருடைய பாடல், கானம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • பீதம் - அவருடைய பானம், அவர் பருகுவது
  • மது⁴ரம் - இனிமையானது
  • பு⁴க்தம் - அவருடைய உணவு, அவர் உண்பது
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸுப்தம் - அவருடைய உறக்கம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ரூபம் - அவருடைய அழகு திருவுருவம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • திலகம் - அவருடைய நெற்றித் திலகம், பொட்டு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

3. குடிலாலக ஸம்யுக்தம் 
பூர்ண சந்த்³ர நிபா⁴னனம்| 
விலஸத் குண்ட³ல த⁴ரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • குடில அலக - சுருட்டைத் தலை முடியுடன்
  • ஸம்யுக்தம் - கூடிய அழகு பொருந்தியவனை
  • பூர்ண சந்த்³ர - முழு நிலவைப் போன்ற
  • நிப⁴ ஆநநம் - ஒளிரும் திருமுகத்தை உடையவனை
  • விலஸத் - பளீர் என ஒளி வீசும், பிரகாசிக்கும்
  • குண்ட³ல - காதணிகளை
  • த⁴ரம் - தரித்திருப்பவனை, அணிந்திருப்பவனை
  • க்ருஷ்ணம் - கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

சுருட்டைத் தலை முடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • வேணுர் - புல்லாங்குழல்
  • மது⁴ரோ - இனிமையானது
  • ரேணுர் - அவரது பாதங்கள் பட்ட தூசி, மண்
  • மது⁴ரஃ - இனிமையானது
  • பாணிர் - கைகள்
  • மது⁴ரஃ - இனிமையானவை
  • பாதௌ³ - இரு பாதங்களும்
  • மது⁴ரௌ - இனிமையானவை 
  • ந்ருத்யம் - நடனம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஸக்²யம் - நட்பு, தோழமை
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் - மதுராவின் அதிபதியாகிய கிருஷ்ணரின்
  • அகி²லம் - அனைத்தும், எல்லாமே
  • மது⁴ரம் - இனிமையானது 

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்