About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 6

பஞ்சாநந ஆப்³ஜ ப⁴வ ஷண்முக² வாஸ வாத்³யாஹ்
த்ரை விக்ரமாதி³ சரிதம் விபு³தா⁴ஹ் ஸ்துவந்தி|
பா⁴ஷாபதிஹ் பட²தி வாஸர ஸுத்³தி⁴ மாராத்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||


ஸேஷாத்ரி மலையின் நாயகனே! தேவர்களில் சிறந்தவரும், நல்ல அறிவும் உள்ளவருமான சிவபெருமான், நான்முகன், முருகப் பெருமான், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் மூன்று அடிகளால் ஓங்கி நின்று உலகளந்த உன்னுடைய த்ரிவிக்ரம அவதார சரிதங்களை போற்றித் துதிக்கின்றனர். தேவ குருவாகிய ப்ரஹஸ்பதியு ம் வணக்கத்துடன், உடன் இருந்து திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் முதலியவற்றை விளக்கும் பஞ்சாங்கத்தை படிக்கின்றார், நீ துயில் எழுந்து திருச்செவி சாற்ற வேண்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா - 6

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம்|
அவதீ⁴ரித ஸா²ரதா³ர விந்தௌ³
சரநௌ தே மரணேபி சிந்தயாமி||


நரகாசுரன் என்னும் அசுரனை அழித்தவனே! நீ என்னை சுவர்க்க லோகத்திலோ, நரக லோகத்திலோ அல்லது இந்த பூலோகத்திலோ, எங்கு வைத்தாலும் சம்மதமே! என் உயிர் பிரியும் அந்திம வேளையிலும், மற்றும் எந்த நேரங்களிலும், சரத் காலத்தில் மலரும் தாமரை மலர்களையும் (தன் அழகிலும் மேன்மையிலும்) தோற்கடிக்கக் கூடிய உன்னுடைய திருவடிகளையே நான் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்!

'நரகாந்தக' என்ற சொல் 'நரகாசுரனை அழித்தவன்' என்ற அர்த்தத்தில் பொதுவாக வந்தாலும், 'நரக வாசத்தை நீக்குபவன்' என்ற அர்த்தத்தையும் தரும். இங்கு ஆழ்வார், ஸ்லோகத்தில் தனக்கு நரகத்தில் இருந்தாலும் சம்மதம் என்று கூறிவிட்டு, பகவானை 'நரகாந்தக' (நரக வாசத்தை நீக்குபவன்) என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நரக வாசத்தை நீக்குபவனை நாம் என்றென்றும் பற்றிக் கொண்டால், நாம் நரகத்தில் தள்ளப்பட மாட்டோம் என்பது உறுதி! 

நாம் இந்த பூமியில் செய்யும் செயல்களின் மூலமாக பாவங்களையும், புண்ணியங்களையும் சேர்த்துக்கொண்டு, மரணத்திற்குப் பின் பாவங்களைக் கழிக்க நரகத்திக்கும், புண்ணியங்களைக் கழிக்க சுவர்க்கத்திற்கும் செல்ல வேண்டும். அங்கு, பாவ புண்ணியங்களைக் கழித்தவுடன், மீண்டும் இந்த பூமியில் தள்ளப்பட்டு விடுவோம்.

ஆனால், பூமியில் வாழும் போதே, பகவானுடைய திருவடிகளை நினைத்துக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இறைவனின் சிந்தனை ஒன்றே நம்முடைய பாவ புண்ணியங்களைப் பொசுக்க வல்லது என்பதை இவ்வாறு குலசேகரர் தெரிவிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருவேங்கட மஹாத்மியம் - 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||நாரணன்||

||ஓம் நமோ நாராயணா||

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர்
வைகுந்தநாதனைச் சோதிக்க விரைந்தார்

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன்
ஆதிசேஷன் மீது லக்ஷ்மி பாதங்களை வருட

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த
நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை

வேஷம் போடுகிறான் மாயவன் 
இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே 

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர்
இங்கும் அதுவே தொடருகின்றதே’ என்று

நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு
நாடகம் போதும் கண்டும் காணாதது போல

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன்
உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை

கால் வலித்திருக்குமே முனிவரே  எனக்
கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை

தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்
துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ?

உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே’ என்று

கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை
கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை

பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன்  
மூன்று லோகத்திலும் சத்துவகுணனை கண்டறிந்ததால்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 163

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 163||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 24||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

வ்யாஸ உவாச|
வாஸநாத்வாஸுதேவஸ்ய 
வாஸிதம் தே ஜகத்த்ரயம்|
ஸர்வபூதநிவாஸோ ஸி 
வாஸுதேவ நமோ ஸ்து தே||

ஶ்ரீ வாஸுதேவ நமோ ஸ்துத ஓம் நம இதி|


வியாசர் கூறினார் 'பகவான் வாசுதேவர் அங்கு இருப்பதால் தான் மூன்று உலகங்களும் வாழத் தகுந்தன. எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமான வாசுதேவருக்கு வணக்கம்'. 'ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதா ஓம் நம இதி' என்ற சொற்றொடர் இறுதியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

வியாசர் கூறினார்: வாசுதேவா, உமக்கு எனது வணக்கங்கள், ஏனென்றால் எல்லா உலகங்களிலும் வாழும் நீர் இந்த உலகங்களை உயிரினங்கள் வாழும் இடங்களாக ஆக்குகிறீர், மேலும் வாசுதேவா, நீர் எல்லா உயிரினங்களிலும் அவற்றின் ஆன்மாவாக வாழ்கிறீர். வாசுதேவாவுக்கு ஓம் நாம வணக்கங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.27 

ப்ரக்ருதே: க்ரிய மாணாநி 
கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
அஹங்கார வி மூடா⁴த்மா 
கர்தா ஹமிதி மந்யதே||

  • ப்ரக்ருதேஹ் - ஜட இயற்கையின்  
  • க்ரிய மாணானி - செய்யப்படும்  
  • கு³ணைஹ் - குணங்களினால்  
  • கர்மாணி - செயல்கள் 
  • ஸர்வஸ²ஹ - எல்லா விதமான 
  • அஹங்கார - அஹங்காரத்தினால்
  • விமூடா⁴த்மா -  குழம்பிய ஆன்மீக ஆத்மா 
  • கர்தா - செய்பவன் 
  • அஹம் - நானே 
  • இதி - என்று 
  • மந்யதே - எண்ணுகிறான்

ஜட இயற்கையின் குணங்களினால் செய்யப்படும் எல்லா விதமான செயல்களை அஹங்காரத்தினால் குழம்பிய ஆன்மீக ஆத்மா தானே செய்பவன் என்று எண்ணுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.20

இத³ம் ஹி விஸ்²வம் ப⁴க³வாந் இவேதரோ
யதோ ஜக³த் ஸ்தா²ந நிரோத⁴ ஸம்ப⁴வா:|
தத்³தி⁴ ஸ்வயம் வேத³ ப⁴வாம்ஸ் ததா²பி தே
ப்ராதே³ஸ² மாத்ரம் ப⁴வத: ப்ரத³ர்ஸி²தம்||

  • இத³ம் விஸ்²வம் ஹி - இவ்வுலகம் முழுவதும்
  • ப⁴க³வாந் இவ - பகவத் ஸ்வரூபமே
  • இதரோ - அவரோ இவ்வுலகத்தை காட்டிலும் வேறுபட்டவர்
  • யதோ - ஏனென்றால்
  • ஜக³த் ஸ்தா²ந நிரோத⁴ - உலகத்தின் ஸ்திதி லயம் சிருஷ்டி முதலான
  • ஸம்ப⁴வாஹ - காரியங்கள் அவனாலேயே ஏற்படுகின்றன
  • த³த்⁴ ஹி - அதையெல்லாம்
  • ஸ்வயம் வேத³ தே - தாங்கள் தனிப்பட்ட முறையில்
  • ப⁴வாம்ஸ் - அறிந்தது தான்
  • ததா² அபி - இருந்த போதிலும் 
  • ப்ராதே³ஸ² மாத்ரம் - ஏக தேசம் மட்டும்
  • ப⁴வதஃ - உமக்கு
  • ப்ரத³ர்ஸி²தம் - சுருங்க கூறப்பட்டது

இந்தப் பிரபஞ்சமே பகவத் ஸ்வரூபம் தானே? ஆனால், அவர் இதில் ஒட்டாது தனித்து நிற்கிறார். ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் ஆற்றுபவர் அவர் தானே? இதெல்லாம் தாங்கள் அறிந்தது தான். இருப்பினும், இதை நான் நினைவுறுத்துகிறேன். அவ்வளவு தான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.98

இத³ம் பவித்ரம் பாப⁴க்நம்
புண்யம் வேதை³ஸ்² ச ஸம்மிதம்|
ய: படேத் ராம சரிதம்
ஸர்வ பாபை: ப்ரமுச்யதே|| 

  • பவித்ரம் - பரிசுத்தமான
  • பாப⁴க்நம் - பாபத்தை போக்குகின்ற
  • புண்யம் - புண்ணியத்தை அளிப்பதான
  • ச - மேலும்
  • வேதை³ஸ்² - வேதங்களுக்கு
  • ஸம்மிதம் - சமமான
  • இத³ம் - இந்த
  • ராம சரிதம் - ஸ்ரீராமருடைய சரித்திரத்தை
  • யஃ - எவர்
  • படேத் - படிக்கின்றாரோ அவர்
  • ஸர்வ பாபைஃ - எல்லா பாப்பங்களில் இருந்தும்
  • ப்ரமுச்யதே - விடுதலை அடைகிறார்

இந்த ஸ்ரீராம சரிதம், பவித்ரமானதும், பாவத்தை அழிப்பதும், புண்ணியத்தை அளிப்பதும், வேதங்களை உள்ளடக்கியதுமாகும். இதைப் படிக்கும் எவனும் பாவங்கள் அனைத்தில் இருந்தும் உண்மையில் விடுபடுவான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 138 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 138 - செங்கண்மால் சிந்தை பெறுவர்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்||

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* 
மாதவா! உண் என்ற மாற்றம்* 
நீர் அணிந்த குவளை வாசம்* 
நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* 
பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* 
சென்ற சிந்தை பெறுவர் தாமே| (2)

  • வார் அணிந்த - மார்பு கச்சை அணிந்து கொண்டிருக்கிற
  • கொங்கை - ஸ்தநங்களை உடைய
  • ஆய்ச்சி - ஆய்ச்சி யசோதை
  • மாதவா - மாதவனே!
  • உண் - பாலைப் பருகுவாயாக
  • என்ற - என்று வேண்டிச் சொன்ன
  • மாற்றம் - வார்த்தையைக் குறித்தனவான
  • நீர் அணிந்த - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற
  • குவளை - செங்கழுநீர் நிலைககளின்
  • வாசம் - நல்ல வாசனை
  • நிகழ் நாறும் - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவரும்
  • பார் அணிந்த - பூமி முழுவதும் அழகாகப் பரவிய
  • தொல் புகழான் - பழமையான கீர்த்தியை உடையவருமான
  • பட்டர்பிரான் - பெரியாழ்வார் அருளிச் செய்த
  • பாடல் - பாசுரங்களை
  • வல்லார் - பாட வல்லவர்
  • சீர் - கல்யாண குணங்களை
  • அணிந்த - அணிகலனாகக் கொண்ட
  • செம் கண் - சிவந்த திருக் கண்களை உடைய
  • மால் மேல் - திருமாலிடத்தில்
  • சென்ற - பதிந்த
  • சிந்தை - மநஸ்ஸை
  • பெறுவர் தாமே - அவர்கள் பெறுவார்கள்

மாதவனே! 'என் முலைப்பாலை உண்பாயாக', என்று கச்சையணிந்த முலைகளை உடைய யசோதை சொன்ன வார்த்தைகளை, நல்ல வாசனையுடன் திகழும் செங்கழுநீர் நிலைகள் நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து உலகப் புகழ் எய்திய பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பாசுரங்களை பாட வல்லவர்கள், குணங்களையே பூஷணமாக உள்ளவனும், சிவந்த அழகிய கண்களை உடையவனுமான திருமாலிடம் பக்தி செலுத்தும் மனதை அடைவார்கள்.

அடிவரவு: அரவணையாய் வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணிந்த - போய்ப்பாடு

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 042 - திருக்கோவலூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||042. திருக்கோவலூர்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 23 - 1

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1078 - பெரிய திருமொழி - 2.4.1
அன்று ஆயர் குலக் கொடியோடு* 
அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* 
உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே| (2)

002. திவ்ய ப்ரபந்தம் - 1138 - பெரிய திருமொழி - 2.10.1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* 
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர்* 
இளந் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* 
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே| (2)

003. திவ்ய ப்ரபந்தம் - 1139 - பெரிய திருமொழி - 2.10.2
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*
தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை*
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* 
ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* 
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1140 - பெரிய திருமொழி - 2.10.3
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம் கொள் பொய்கைக்*
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1141 - பெரிய திருமொழி - 2.10.4
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* 
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* 
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* 
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1142 - பெரிய திருமொழி - 2.10.5
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும்*
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1143 - பெரிய திருமொழி - 2.10.6
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* 
அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு*
வியன் கலை எண் தோளினாள் விளங்கு* 
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1144 - பெரிய திருமொழி - 2.10.7
இருங் கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி* 
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* 
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* 
காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1145 - பெரிய திருமொழி - 2.10.8
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* 
பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்*
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* 
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* 
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1146 - பெரிய திருமொழி - 2.10.9
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு* 
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* 
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* 
செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை*
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1147 - பெரிய திருமொழி - 2.10.10
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* 
நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* 
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* 
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்* 
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே| (2)

012. திவ்ய ப்ரபந்தம் - 1404 - பெரிய திருமொழி - 5.6.7
சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை* 
பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை* 
வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்* 
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை* யான் கண்டது* 
அணி நீர்த் தென் அரங்கத்தே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 106

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 51||

||ஸ்கந்தம் 04|| 

மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்.

ருத்ர கணங்களின் செய்கையால் பயந்து போன தேவர்களும் புரோஹிதர்களும் ஓடிச் சென்று ப்ரும்மாவிடம்‌ முறையிட்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்பே எதிர்பார்த்திருந்த ப்ரும்மனும் ஸ்ரீமன்‌நாராயணனும் தக்ஷனின் வேள்விக்குச் செல்லவில்லை.

தேவர்கள் கூறியதைக் கேட்ட ப்ரும்மா, தேவர்களே! வலிமை மிக்க ஒருவன் தனக்கு எதிரானவனுக்கு தீமை எண்ணினால், அவன் எண்ணும் தீமைகள் அனைத்தும் அவனுக்கே வந்து விடும்.

முறைப்படி வேள்விகளில் ஹவிர் பாகம் கொடாமல் பரமேஸ்வரனுக்கு பெருந்தவறு இழைத்து விட்டீர்கள். அவர் எளிதில் அருள் புரியும் வள்ளல். அவர் தாளிணை பற்றி மன்னிப்புக் கோருங்கள்.


நீங்கள் துவங்கிய வேள்வி முற்றுப்பெற வேண்டுமானால், உடனே சென்று பாவ மன்னிப்பு வேண்டுங்கள். ஏற்கனவே தக்ஷனின் சொல்லம்புகளால் மிகவும்‌ புண்பட்டிருக்கிறார். இப்போது அன்பு மனைவியையும்‌ இழந்து விட்டார். அவருக்குக் கோபம் வருமாகில் அனைத்து உலகங்களும்‌ அழியும்.

அவரது பராக்ரமத்தையும் உண்மை நிலையையும் எவரும் அறிய மாட்டார்.

அவரைச் சமாதானப் படுத்துவதும் கடினம். அவர் திருவடிகளில் தஞ்சம் புகுவதே ஒரே வழி என்றார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மா தானும்‌ கைலாயம் கிளம்பினார்.

ஏற்கனவே வைகுண்டத்தை மிக அழகாக நேரில் காண்பிப்பதாக வர்ணித்திருக்கிறார் வியாஸ பகவான். இப்போது கைலாயத்தை அழகுற வர்ணிக்கிறார்.

கைலாய மலையில் மூலிகைகள், தவம், மந்திரம், யோகம்‌ இவற்றால் சித்தி பெற்றவர்களும்‌, மற்றும் பிறவியிலேயே சித்தி பெற்ற தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் நித்ய வாசம்‌ செய்கின்றனர்.

கின்னரர்கள், கந்தர்வர்கள், அப்ஸரப் பெண்டிர்கள்‌ நிறைந்தது அம்மாமலை. பல வண்ணமயமான தாதுக்கள் நிறைந்த உயர்ந்த சிகரங்களை உடையது.

மரங்கள், செடிகொடிகள், புதர்கள்‌ மண்டியது. காட்டு விலங்குகள்‌ கூட்டம்‌ கூட்டமாகச் சஞ்சரிப்பது.


பளிங்கு போன்ற நீரோடைகளும் அருவிகளும் கொண்டது. குகைகளும் தாழ்வரைகளும் நிரம்பியது. சித்தர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்களின் விளையாட்டுத் தோட்டமாக விளங்குவது.

மயில்கள் அகவல் ஒலிகள், பஞ்சம ஸ்வரத்தில் குயில்களின் குரல்கள் , வண்டுகளின் ரீங்காரம், பல்வேறு பறவைகளின் கலகலவென்ற ஓசை, நதிகளின் சலசலப்பு போன்ற பல்வேறு நாதங்கள்‌ கேட்டுக்கொண்டே‌ இருக்கும்.

ஏராளமான கற்பகத் தருக்களைக் கொண்டது. அங்குமிங்கும் நடந்து செல்லும் யானைகளைக் கண்டால் மலை தான் அசைகிறதோ என்று தோன்றும்.

மந்தாரம், பாரிஜாதம், ஸரவம், தமாலம், தேக்கு, பனை, மருதம், மா, கதம்பம், வேம்பு, நாகம், புன்னாகம், சம்பகம், பாடலம், அசோகம், மகிழம், குந்தம், மருதோன்றி முதலிய மரங்கள், நூறு‌ இதழ்கள் கொண்ட பொற்றாமரைகள், ஏலக்காய், மாலதிக் கொடிகள், குடை மல்லிகை, மல்லிகை, வ்ருக்ஷி ஆகிய பூக்களும்‌ நிரம்பி வழிகின்றன.

இன்னும் கைலாயத்தில் காணப்படும் ஏராளமான மரங்கள், பூக்கள், விலங்குகளின் வகைகள் அனைத்தும் விவரமாகச் சொல்லப்படுகின்றன. அங்கு அவர்கள் அளகாபுரியைக் கண்டனர். ஸௌகந்திகம் என்னும் தாமரைப்பூக்கள் நிறைந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டனர்.

அளகாபுரிக்கு வெளியில் பகவானின் தாமரைத் தாள்கள் பட்டு, நந்தா, அளகநந்தா என்று பவித்ரமான புண்ய நதிகள்‌ உள்ளன.

பொன், வெள்ளி, நவமணிகளால் இழைத்துச் செய்யப்பட்ட விமானங்களில் யக்ஷர்களது மனைவிகள்‌ உலா வருகின்றனர். அதனால் அளகாபுரி மின்னல்களால் சூழப்பட்ட ஆகாயம்போல் காட்சியளித்தது. நீலத்தாமரைகள்‌ மிகுந்த தடாகங்கள் காணப்பட்டன.

அனைத்தும் கண்டுகொண்டே சென்ற தேவர்கள் அங்கு ஒரு பெரிய கல்லால மரத்தைக் கண்டனர்.

அம்மரம் ‌நூறு யோஜனை உயரமுடையது. எழுபத்தைந்து யோஜனை தூரத்திற்கு அதன் கிளைகள் படர்ந்திருந்தன. அங்கு எப்போதும்‌ நிழல்‌ நிரம்பியிருந்தது. பறவைகளின் கூடுகளே இல்லை.

அம்மரத்தடியில் வசித்தால்‌ மனம் ஒன்றுபடும். முக்தியின்பம்‌ பெற விரும்புவோர் வந்து கூடுமிடம்‌ அது.

அவ்வாலமரத்தடியில் சினம் தவிர்த்த யமனோ? என்னும்படி வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டனர் தேவர்கள்.

அமைதியே உருவாக ஸனகர், முதலியவர்களும், குபேரனும்‌ சேவை செய்ய பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். உலகங்கள் அனைத்திற்கும் தலைவர், ஏழைப் பங்காளன், நண்பர், அன்புள்ளத்தால் அனைவர்க்கும் அருள் செய்பவர். உலக நன்மைக்காக உபாசனை, தவம், தியானம் ஆகியவற்றைச் செய்பவர்.

மாலைவேளை மேகம் போல் செந்நிறத் திருமேனி கொண்டவர். பொன்னார் மேனி, விபூதி, தண்டம், சடைமுடி, மான்தோல், சந்திரகலை ஆகியவற்றோடு விளங்கினார்.

தர்பையினாலான ஆசனத்தில் அமர்ந்த முனிவர்கள் நாற்புறமும் சூழ, மத்தியில் நாரதருக்கு ப்ரும்ம தத்வத்தை உபதேசம்‌ செய்து கொண்டிருந்தார்.

தனது இடது பாதத்தை வலது தொடையில் வைத்து, இடது முழங்காலில் திருக்கரத்தை வைத்து ஊன்றி, வலது முன்னங்கையில் ருத்ராக்ஷமாலை ஏந்தி ஞான முத்திரை காண்பித்துக் கொண்டிருந்தார்.

அவரை தேவ கணங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ப்ரும்மாவைக் கண்ட பரமேஸ்வரன் எழுந்திருந்து இரு கரம்‌ கூப்பி அவரை வணங்கினார்.

அக்காட்சி வாமன அவதாரம் எடுத்த போது லோகபூஜ்யரான மஹாவிஷ்ணு கச்யப முனிவரை வணங்கியது போலிருந்தது.

உடனே மற்ற தேவர்களும், முனிவர்களும் ப்ரும்மாவை வணங்கினர்.

ப்ரும்ம தேவர் பரமேஸ்வரனிடம்‌ பேசலானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

அத்ரி ஆதி³ ஸப்த ருஷயஸ் ஸ முபாஸ்ய ஸந்த்⁴யாம்
ஆகாஸ ஸிந்து⁴ கமலாநி மநோஹ ராணி|
ஆதா³ய பாத³யுக³ம் அர்ச்சயிதும் ப்ரபந்நாஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ!⁴ தவ ஸுப்ரபா⁴தம்||


ஆதிஸேஷ மலை ஸிகரத்தில் எழுந்தருளி இருக்கும் பரிபூரணனே! அத்ரி முதலான ஏழு முனிவர்களும் ஸந்த்யா வந்தனம் செய்த பின்னர், உன் திருவடிகள் இரண்டையும் மலரிட்டு அர்ச்சிப்பதற்காக, மனத்தை கவரக் கூடிய ஆகாஸ கங்கையில் முளைத்து எழுந்த தாமரை மலர்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். உனக்கு நற்பொழுது புலருக!  வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ முகுந்த மாலா - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 5

நாஸ்தா² த⁴ர்மே ந வஸு நிசயே 
நைவ காமோப போ⁴கே³ 
யத்³ யத்³ ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வந் 
பூர்வ கர்மாணு ரூபம்|
ஏதத் ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் 
ஜன்ம ஜன்மாந்த ரேபி 
த்வத் பாதா³ம் போ⁴ருஹ யுக³ 
க³தா நிஸ்²சலா ப⁴க்திரஸ்து||


பகவானே! எனக்கு இந்த உலக தர்மங்களின் மீது எவ்விதமான பற்றும் இல்லை! ஏராளமான செல்வக் குவியல்களின் மீதோ அல்லது சிற்றின்பத்தின் மீதோ எனக்கு நாட்டம் இல்லை! என் முந்தைய ஜென்மங்களின் கர்ம வினைப்படியே, எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கட்டும்! நான் உன்னிடம் வைக்கும் விருப்பமான கோரிக்கை என்னவென்றால், என்னுடைய எல்லா ஜன்மங்களிலும், உன் திருப் பாத கமலங்களில் மட்டும் ஸ்திரமான பக்தியினை தந்தருள வேண்டும் என்பதே!

தர்ம, அர்த்த, காமங்களில் உள்ள பற்றுகளை நீக்கி, பகவானுடைய ஸ்ரீ பாத கமலங்களால் மட்டுமே நம் மனமானது ஈர்க்கப்பட வேண்டும். இதற்கு தேவை சரணாகதி ஒன்றே! உலக போகங்களிலும், சிற்றின்பத்திலும் கிடைக்கும் சுகம் அநித்தியமானது. நித்தியமானவனாய், ஞான ஸ்வரூபனாய், ஆனந்த மயனுமாய் விளங்குகின்ற, குறையொன்றும் இல்லாத கோவிந்தனையே நாம் பாடிப் பரவ வேண்டும் என்பதையே குலசேகரர் இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருவேங்கட மஹாத்மியம் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஈசனும் உமையும்||

||ஓம் நமோ நாராயணா||

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு
பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார்

அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின்
தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன்
கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு
கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த
விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த

முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று
தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு

நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த
சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர்
சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு

உலகில் இனிக் கிடையாது உனக்கு
உருவ வழிபாடு என்ற ஒன்று என்றார்

நின்று விட்டது சிவனுக்கு உருவ வழிபாடு
இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே

சத்வ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு
உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 162

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 162||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 24||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

ஶ்ரீ ப⁴க³வாநுவாச|
யோ மாம் நாம ஸஹஸ்ரேண 
ஸ்தோது மிச்ச²தி பாண்ட³வ|
ஸோ ஹமேகேந ஸ்²லோகேன 
ஸ்துத ஏவ ந ஸம்ஸ²ய꞉|| 

ஸ்துத ஏவ ந ஸம்ஸ²ய ஓம் நம இதி|


பகவான் கூறினார் 'அர்ஜுனா, ஒருவருக்கு என்னுடைய ஆயிரம் நாமங்களைச் சொல்லி என்னை வழிபட ஆசை இருக்கும் போது, ​​அவர் முதல் ஸ்லோகத்தைச் சொல்லும் போது கூட நான் என்னை வணங்குவதாகக் கருதுகிறேன், இதில் எந்த சந்தேகமும் இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.26 

ந பு³த்³தி⁴ பே⁴த³ம் ஜநயேத³
ஜ்ஞாநாம் கர்ம ஸங்கி³ நாம்|
ஜோஷ யேத் ஸர்வ கர்மாணி 
வித்³வாந் யுக்த: ஸமா சரந்||

  • ந - இல்லை 
  • பு³த்³தி⁴ பே⁴த³ம் - அறிவைக் குழப்புதல் 
  • ஜநயேது³ - அவன் செய்ய வேண்டும் 
  • அஜ்ஞாநாம் - முட்டாளின்  
  • கர்ம ஸங்கி³ நாம் - பலன் நோக்குச் செயல்களில் பற்றுள்ளோர்  
  • ஜோஷ யேத் - அவன் இணைக்க வேண்டும் 
  • ஸர்வ - எல்லா  
  • கர்மாணி - செயல் 
  • வித்³வாந் - அறிவுடையோன் 
  • யுக்தஸ் - ஈடுபடுத்தி  
  • ஸமா சரந் - பயின்று

அறிவுடையோன், பலன் நோக்குச் செயல்களில் பற்றுள்ள பாமரனைக் குழப்புதல் கூடாது. தானும் செயலாற்றி, எல்லா செயல்களிலும், யோகத்தில் பயில ஈடுபடுத்தி, அவனை இணைக்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்