||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 3
ப்ரபன்ன பாரிஜா தாய,
தோத்ர வேத் ரைக பாணயே|
ஜ்ஞான முத்³ராய க்ருஷ்ணாய,
கீ³தாம் ருத து³ ஹே நம꞉||
- ப்ரபன்ன - தன்னைச் சரணடைந்தவர்களுக்கு
- பாரிஜாதாய - கேட்டதைத் தரும் பாரிஜாத மரத்தைப் போன்றவர்
- தோத்ர வேத்ர - குதிரையைச் செலுத்தும் சாட்டை அல்லது கோலை
- ஏக பாணயே - ஒரு கையில் ஏந்தியிருப்பவர்
- ஜ்ஞான முத்ரா - சின்முத்திரை எனப்படும் ஞானத்தைக் குறிக்கும் கை முத்திரையைக் காட்டுபவர்
- க்ருஷ்ணாய - ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
- கீதா அம்ருத - பகவத் கீதை என்னும் அமிர்தத்தை
- துஹே - பசும் பாலாகக் கறந்து கொடுத்தவர்
- நமஹ - என்னுடைய நமஸ்காரங்கள்
தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கேட்ட வரங்களை அள்ளித் தரும் பாரிஜாத மரம் போன்றவரான, அர்ஜுனனின் தேரோட்டியாக, பார்த்தசாரதியாக ஒரு கையில் குதிரையை ஓட்டும்சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் ஏந்தி கொண்டு, மற்றொரு கையில் ஞான முத்திரையைத் தாங்கியிருப்பவரான, பகவத் கீதை என்னும் ஞான அமிர்தத்தைக் கறந்து உலகிற்கு அளித்தவரான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment