||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பொது தனியன் 2
குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)
லஷ்மீ நாத² ஸமாரம்பா⁴ம்*
நாத² யாமுந மத்⁴யமாம்*
அஸ்மதா³சார்ய பர்யந்தாம்*
வந்தே³ கு³ரு பரம்பராம்||
- லஷ்மீ நாத²: லட்சுமியின் கணவனான ஸ்ரீமன் நாராயணனை
- ஸமாரம்பா⁴ம்: முதன்மையாகக் கொண்டு தொடங்கியதும்
- நாத²: நாதமுனிகளையும்
- யாமுந: ஆளவந்தார் (யாமுனாச்சாரியார்) ஆகியோரையும்
- மத்⁴யமாம்: நடுவில் (இடைக்கால குருக்களாகக்) கொண்டதும்
- அஸ்மத்³: என்னுடைய
- ஆசார்ய: குருவை (ஆசாரியனை)
- பர்யந்தாம்: எல்லையாகக் (முடிவாகக்) கொண்டதுமான
- வந்தே³: வணங்குகிறேன்
- கு³ரு பரம்பராம்: இந்த ஆச்சாரியர்களின் வரிசையை
லட்சுமி தேவியின் மணாளனாகிய ஸ்ரீமன் நாராயணனை முதற் கடவுளாகக் கொண்டு தொடங்கி, நடுவிலுள்ள நாதமுனிகளையும் ஆளவந்தாரையும் ஆச்சாரியர்களாகப் பெற்று, என்னுடைய ஆச்சாரியனை இறுதி எல்லையாகக் கொண்டு விளங்கும் இந்த உன்னதமான குருபரம்பரையை நான் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment