About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன் 2

குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

லஷ்மீ நாத² ஸமாரம்பா⁴ம்* 
நாத² யாமுந மத்⁴யமாம்*
அஸ்மதா³சார்ய பர்யந்தாம்* 
வந்தே³ கு³ரு பரம்பராம்||

  • லஷ்மீ நாத²: லட்சுமியின் கணவனான ஸ்ரீமன் நாராயணனை
  • ஸமாரம்பா⁴ம்: முதன்மையாகக் கொண்டு தொடங்கியதும்
  • நாத²: நாதமுனிகளையும்
  • யாமுந: ஆளவந்தார் (யாமுனாச்சாரியார்) ஆகியோரையும்
  • மத்⁴யமாம்: நடுவில் (இடைக்கால குருக்களாகக்) கொண்டதும்
  • அஸ்மத்³: என்னுடைய
  • ஆசார்ய: குருவை (ஆசாரியனை)
  • பர்யந்தாம்: எல்லையாகக் (முடிவாகக்) கொண்டதுமான
  • வந்தே³: வணங்குகிறேன்
  • கு³ரு பரம்பராம்: இந்த ஆச்சாரியர்களின் வரிசையை

லட்சுமி தேவியின் மணாளனாகிய ஸ்ரீமன் நாராயணனை முதற் கடவுளாகக் கொண்டு தொடங்கி, நடுவிலுள்ள நாதமுனிகளையும் ஆளவந்தாரையும் ஆச்சாரியர்களாகப் பெற்று, என்னுடைய ஆச்சாரியனை இறுதி எல்லையாகக் கொண்டு விளங்கும் இந்த உன்னதமான குருபரம்பரையை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment