About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்⁴யான ஸ்லோகம் - 2

நமோ அஸ்து தே வ்யாஸ விஸால பு³த்³தே⁴ 
பு²ல்லார விந்தா³ யத பத்ர னேத்ர|
யேன த்வயா பா⁴ரத தைல பூர்ண꞉
ப்ரஜ் வாலிதோ ஜ்ஞான மய꞉ ப்ரதீ³ப꞉||

  • நமோ – வணக்கம், நமஸ்காரம்
  • அஸ்து – உண்டாகட்டும், உரித்தாகட்டும்
  • தே – உமக்கு
  • வ்யாஸ – வியாச முனிவரே
  • விஸால பு³த்³தே⁴ – பரந்த விசாலமான அறிவைக் கொண்டவரே
  • பு²ல்ல – மலர்ந்த
  • அரவிந்தா³ – தாமரை மலரின்
  • ஆயத – நீண்ட
  • பத்ர – இதழ்கள் போன்ற
  • னேத்ர – கண்களை உடையவரே
  • யேன – எவரொருவரால் 
  • த்வயா – உம்மால்
  • பா⁴ரத – மகாபாரதம் என்கிற
  • தைல – எண்ணெயால்
  • பூர்ணஹ் – நிரப்பப்பட்ட
  • ப்ரஜ் வாலிதோ – ஏற்றி வைக்கப்பட்டு, பிரகாசிக்கச் செய்யப்பட்ட
  • ஜ்ஞான மயஹ் – அறிவு, ஞான வடிவிலான 
  • ப்ரதீ³பஹ் – விளக்கு

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக் கண்களை உடைய வ்யாச குருவே, உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளி வீசுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment