About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன்  3

எம்பெருமானார் தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

யோ நித்ய மச்யுத பதா³ம் பு³ஜ யுக்³ம ருக்ம*
வ்யாமோ ஹதஸ் ததி³தராணி த்ருணாய மேநே*
அஸ்மத்³ கு³ரோர் ப⁴க³வ தோஸ்ய த³யைக ஸிந்தோ⁴:*
ராமாநுஜஸ்ய சரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே||

  • யோ – யார் ஒருவர், ஸ்ரீ ராமானுஜராகிய எவர் 
  • நித்யம் – எப்போதும், எக்காலத்திலும் இடைவிடாமல் 
  • அச்யுத – அச்யுதனுடைய (தன்னை அடைந்தவர்களை என்றும் கைவிடாத எம்பெருமான் ஸ்ரீமந் நாரணனுடைய)
  • பதா³ம் பு³ஜ – தாமரை மலர் போன்ற திருவடிகள்
  • யுக்³ம – ஜோடி, இரு திருவடிகள்
  • ருக்ம – தங்கம் போன்ற பிரகாசமான, அந்த திருவடிகளின் அழகில் 
  • வ்யாமோ ஹதஸ் – பேரன்பினால், மிகுந்த மோகத்தினால், ஈடுபாட்டினால்
  • தத்³ இதராணி – அந்த திருவடிகளைத் தவிர மற்ற எல்லா உலக விஷயங்களையும் (செல்வம், பதவி, பந்தம்)
  • த்ருணாய – ஒரு சாதாரண புல்லுக்குச் சமமாக
  • மேநே – கருதினாரோ, மதித்தாரோ 
  • அஸ்மத்³ கு³ரோர் – நம்முடைய ஆச்சாரியனும் 
  • ப⁴க³வதோ அஸ்ய – அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்த பகவானின் அம்சம் போன்றவரும்
  • த³யா ஏக – கருணை ஒன்றையே வடிவாகக் கொண்ட
  • ஸிந்தோ⁴: – கடலாக விளங்குபவருமான
  • ராமாநுஜஸ்ய – ஸ்ரீ ராமானுஜருடைய
  • சரணௌ – இரண்டு திருவடிகளை
  • ஸ²ரணம் – புகலிடமாக, தஞ்சமாக
  • ப்ரபத்³யே – சரணடைகிறேன், பற்றிக் கொள்கிறேன் 

என்றும் அழியாத எம்பெருமானின் தாமரை மலர் போன்ற திருவடி இணைகளின் மீது கொண்ட அளவற்ற பக்தியினால், ஸ்ரீ ராமாநுஜர் உலகத்திலுள்ள பொருட்களையும் ஆசைகளையும் ஒரு புல்லுக்கு சமானமாகவே கருதினார். கல்யாண குணங்களை கொண்ட வரும், தயையின் கடலுமான அவரே நமக்கெல்லாம் குரு. அவர் திருவடிகளுக்குச் சரணம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment