||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்துதி||
||ஓம் நமோ நாராயணா||
வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால்
வந்து பூமியில் துதித்தனர் வானவர் முனிவர்
இந்திரன் பிரமன் துவாதச ஆதித்யர்கள்
ருத்திரர் தேவர் வசுக்கள் திக்பாலகர்கள்
கந்தருவர் சப்த ரிஷிகள் மருத் கணங்கள்
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்
தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த
ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில்
ப்ரபாவமும் தோற்றமும் மாறவேயில்லை
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்’
மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே
தோற்றத்தையும் தன் முக விலாசத்தையும்
அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்
அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்
கருணை பொழியும் கமலக் கண்களுடனும்
கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்
கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை
வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால்
ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment