||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||கிரீடாசலம்||
||ஓம் நமோ நாராயணா||
ஞான லோகத்தில் தியானத்தில் இருந்த
மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை
தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார்
வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே
ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே
சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன்
சிருஷ்டித்தான் சூரிய சந்திரர்களை முதலில்
பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர்
பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்
பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான்
பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்
கருடனைப் பணித்தார் வைகுந்தம் செல்க
பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க
வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்
வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்
கோமதி நதிக்குத் தெற்கேயும் மற்றும்
கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது
நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்
காய் கனி மூலிகைகளால் நிறைந்தது
கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது
ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது
ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது
தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப்
பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது
இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம்
கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே
நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட
நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்
அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம்
அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்
எழுந்தருளினார் வராஹ பெருமான்
தாம் விழைந்தபடி பூவுலகில் விமானத்தின் கீழ்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment