||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
புனர்பூசம் நக்ஷத்திரம்
ஸ்ரீ முதலியாண்டான்
(தாசரதி - எம்பெருமானாரின் மருமான்)
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச்செய்தவை - முதல் திருவந்தாதி தனியன், தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)
தனியன்
1. பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்||
2. மேஷே புநர் வஸூதிநே பாஞ்ச ஜன்யாம்ச சம்பவம்|
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்||
வாழி திருநாமம்
1. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே|
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே|
சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே|
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே|
உத்தமமாம் வாதூலம் உயர வந்தோன் வாழியே|
ஊர் திருந்தச் சீர் பாதம் ஊன்றினான் வாழியே|
முத்திரையும் செங்கோலும் முடி பெறுவோன் வாழியே|
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே||
2. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே|
அநவரதம் எதிராசர் அடி தொழுவோன் வாழியே|
சித்திரையில் புணர்வசு நாள் சிறக்க வந்தோன் வாழியே|
ஸ்ரீ பாஷ்யச் செழும் பொருளை செப்பும் அவன் வாழியே|
பச்சை வாரணம் விளங்க பார்வை செய்தோன் வாழியே|
பரகாலன் அடி இணைகள் பரவும் அவன் வாழியே|
உத்தம வாதூல குலம் உகந்து உதித்தான் வாழியே|
உய்துணை முதலியாண்டான் ஒண் பதம் இரண்டும் வாழியே||
3. சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்தோன் வாழியே|
ஸ்ரீ ரங்கராஜர் அடி சிந்தை செய்வோன் வாழியே|
பக்தியுடன் பதின்மர் கலை பரிந்து அளிப்போன் வாழியே|
பாதுகையாய் அதிபதி தாள் பதிக்கும் அவன் வாழியே|
முக்தி வரும் எட்டு எழுத்தை மொழிந்து அருள்வோன் வாழியே|
முக்கோல் என்று எதிராசர் மொழி பெற்றோன் வாழியே|
தத்துவ நூல் பாஷியத்தை தரித்து உரைப்போன் வாழியே|
தாசரதி நளின மலர்த் தாள் இணைகள் வாழியே||
முக்த ஸ்லோகங்கள்
1. ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:|
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்||
2. ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||
3. ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||
4. யஸ்சக்ரே பக்தநகரே தாடீபஞ்சக முத்தமம்|
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்||
திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்
வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்|
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||
திருநாள் பாட்டு
எட்டும் இரண்டுடன் ஏதமில் வேதமும் ஓதி உணர்ந்திடு நாள்|
எங்கும் இடர் கெட அங்கம் உபாங்கமும் ஓங்கி உயர்ந்திடு நாள்|
மட்டவிழும் பொழில் மன்னும் அரங்கர் தம் செங்கோல் சிறந்திடு நாள்|
மாகுடபால் ஐந்து நாரணனார் பதி வாழ்வு பொலிந்திடு நாள்|
இட்டம் உயர்ந்து எதிராசருடன் மறை முப்புரி ஊட்டிய நாள்|
என் மருமான் என்று இவர் பதமும் தண்டமும் ஆக்கிக் கொண்டு அருள் நாள்|
சித்தர் மகிழ்ந்திட தாசரதிக்கு குரு போந்து பிறந்தருள் நாள்|
சித்திரையில் புனர்பூசம் அதாகிய செல்வம் மகிழ்ந்திடு நாளே||
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின், சுவாமி முதலியாண்டான் கி.பி 1027 ஆம் ஆண்டு தொண்டை மண்டலத்தில் உள்ள பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில் (இன்று "நாசரேத் பேட்டை" என்று குறிப்பிடப்படுகிறது) ஆனந்தநாராயண தீக்ஷிதருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாரராய், எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி. ஆனந்தநாராயண தீக்ஷிதருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. திருவேங்கடமுடையனை வணங்கி குழந்தை வேண்டி திருவேங்கடத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். திருநின்றவூர் செல்லும் வழியில், ஏரி காத்த ராமரின் சன்னதியில் இரவு தங்கிய ஸ்ரீராமர் (ஆனந்தநாராயண தீக்ஷிதரின் திருவரதனப் பெருமாள்) அவரது கனவில் தோன்றி, திருவேங்கடத்திற்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், திருஆனந்தழ்வான் (ஆதி சேஷர், ஐந்து தலை நாகம், இறைவன் சயனிக்கிறார்) ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜராகப் பிறந்து, ஸ்ரீ ராமானுஜருக்கு சேவை செய்ய அவரது மகனாகப் பிறப்பார் என்றும் அறிவுறுத்தினார்.
ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர். மற்றும் எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின் த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கம் உடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம் முதலியாண்டானும், ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.
எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.
ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச் சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.
எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||