||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆயில்யம் நக்ஷத்திரம்
கோயில் கந்தாடை கொமாண்டூர் இளையவல்லி ஆச்சான்
(பாலதந்வி, 74 ஸிம்ஹாஸநாதிபதிகளுள் ஒருவர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - ஆயில்யம்
- அவதார ஸ்தலம் - கொமாண்டூர்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருப்பேரூர்
- ஆசார்யன் - எம்பெருமானார்
தனியன்
1. ஸ்ரீ கௌஸிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்|
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநூஜம்||
2. ஸ்ரீ ஸைல பூர்ண பத பங்கஜ ஸக்த சித்தம்|
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி||
3. ஸ்ரீ யதீந்த்ர மாத்ரு ஸ்வஸ் ரீய: ப்ரதி தார்ய பதே ஸ்தித:|
மூலபூத: கௌசிகாநாம் தம் வந்தே பாலதந் விநம்||
4. கௌசி காபி ஜநாநேக காலார்ஜித தப: பலம்|
ராமாநுஜ குரும் வந்தே பாலதந்வி வரா பிதம்||
வாழித் திருநாமம்
1. சீராரும் திருப்பதியில் திகழ்ந்து இருந்தான் வாழியே|
வேங்கடவர் தாள் இணையை விரும்பும் அவன் வாழியே|
ஏராரும் எதிராசன் இணை அடியோன் வாழியே|
சீராரும் அவர் தாய்க்கு பின்னவள் தநயன் வாழியே|
பக்தியுடன் பாடியதைச் செப்பும் அவன் வாழியே|
எழில் சித்திரை ஆயில்யம் வந்து உதித்தான் வாழியே|
பார் விளங்கும் கொமாண்டூரில் அவதரித்தான் வாழியே|
அந்தமில் சீர் இளைய வல்லிப் பரன் அடிகள் வாழியே||
2. பக்தியுடன் பதின்மர் கலை பகரும் அவன் வாழியே|
பண்டரங்கர் பதம் நெஞ்சில் பற்றி நின்றான் வாழியே|
எதிராசர் இணை அடியே தஞ்சம் என்றான் வாழியே|
எழில் மறையின் ஏரிக்கோர் மதகானான் வாழியே|
முக்தி தரும் நெறி தன்னை மொழிந்து அருள்வோன் வாழியே|
மூது திருமலை நம்பிக்கு ஆட்செய்தான் வாழியே|
சித்திரையில் ஆயில்யம் சிறக்க வந்தோன் வாழியே|
சீர் பால தந்வி குரு திருத்தாள்கள் வாழியே||
கோயில் கந்தாடை கொமாண்டூர் இளையவல்லி ஆச்சான் என்பவர், எம்பார் போல, வைணவ ஆச்சார்யரான எம்பெருமானாருக்கு தாய்வழி சகோதரர், ஸ்ரீராமர் அவதாரத்தில் இலட்சுமணருக்கு (இளையவில்லி) சமமானவர். இவர் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் வைணவ மரபில், ராமானுஜரின் நெருங்கிய சீடராகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் விளங்கியவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment