About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

||ஸ்லோகம் 1.5.11||

தத்³வாக்³ விஸர்கோ³ ஜநதாக⁴ விப்லவோ
யஸ்மிந் ப்ரதி ஸ்²லோகம ப³த்³த⁴வத் யபி|
நாமாந் யநந்தஸ்ய யஸோ²ங்கி தாநி ய
ச்ச்²ருண்வந்தி கா³யந்தி க்³ருணந்தி ஸாத⁴வ:||

  • யத் - எந்த வாஸுதேவனின் பெயர்களை
  • ஸாத⁴வஹ - ஸாதுக்கள்
  • ஸ்²ருண்வந்தி - சொல்பவர்கள் இருந்தால் கேட்பார்கள்
  • க்³ருணந்தி - கேட்பவர்கள் இருந்தால் சொல்லுவார்கள்
  • கா³யந்தி - இரு வகையோறும் இல்லாத போது தாங்களே கானம் செய்வார்கள்
  • யஸ்மிந் - எந்த வாக் பிரயோகமானது
  • அப³த்³த⁴வதி அபி - அப சத்தங்களோடு கூடியதாய் இருந்த போதிலும்
  • ப்ரதி ஸ்²லோகம் - ஒவ்வொரு ஸ்லோகத்திலும்
  • அநந்தஸ்ய - அப்படிப்பட்ட ஸ்ரீ வாஸுதேவனின்
  • யஸோ²ங்கிதாநி - புகழை அடையாளமாகக் கொண்ட
  • நாமாநி - பெயர்கள் இருக்கின்றனவோ
  • தத்³வாக்³ விஸர்கோ³ - அந்த வாக் பிரயோகம் தான்
  • ஜநதாக⁴ விப்லவோ - மக்களின் பாவத்தை போக்க வல்லதாக இருக்கிறது

நாம் கூறும் தோத்திரங்கள் இலக்கண வழுக்கள் உடையனவாக இருக்கலாம். ஆனால், அது இறைவனது புகழ் நிரம்பியதாக இருக்குமேயானால், அதைப் பெரியோர்கள் செவிbசாய்த்துக் கேட்பார்கள். கேட்பவன் இருந்தால்bதானே தோத்திரம் செய்து கூறுவார்கள். சொல்கிறவனோ, கேட்பவனோ இருவரும் இல்லையேயானாலும் தாங்களே சொல்லி, கீர்த்தனம் செய்து, தாங்களே கேட்டு இன்புறுவார்கள். ஏனெனில், அந்தச் சொல் பகவானின் நாமங்கள் மக்களின் பாவக்குவியல்களைப் போக்கவல்லனவன்றோ!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment