||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 32 பாசுரங்கள்
001. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 741 - 751 - பத்தாம் திருமொழி
----------
002. திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1158 - 1167 - மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1168 - 1177 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|
அந்தாதி
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட*
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய*
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்*
சித்திர கூடம் கருதிச் செல்|
- நெஞ்சே - மனமே!
- அடியால் - தனது திருவடிகளினால்
- உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்
- அன்று - முற்காலத்தில்
- அளந்து கொண்ட - அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்ட
- நெடியானை - திரிவிக்கிரம அவதாரம் செய்த கடவுளை
- கூடுதி ஏல் - சேர வேண்டுமென்று விரும்பினையானால்
- கொடிது ஆய - கொடுமை உள்ளதாகிய
- குத்திரம் - இழி குணத்தைக் கொண்ட
- கூடு - இந்தச் சரீரத்தை
- அங்கி - அக்னியானது
- கொளுந்தா முன் - எரித்து விடுதற்கு முன்னமே
- கோவிந்தன் - கோவிந்தராஜன் எழுந்தருளி இருக்கின்ற
- சித்திரகூடம் - திருச்சித்திரகூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
- கருதி - நினைத்து
- செல் - செல்வாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment