About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 32 பாசுரங்கள்

001. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 741 - 751 - பத்தாம் திருமொழி 
----------

002. திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1158 - 1167 - மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1168 - 1177 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65) 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட*
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய*
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்*
சித்திர கூடம் கருதிச் செல்|

  • நெஞ்சே - மனமே! 
  • அடியால் - தனது திருவடிகளினால்
  • உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்
  • அன்று - முற்காலத்தில்
  • அளந்து கொண்ட - அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்ட
  • நெடியானை - திரிவிக்கிரம அவதாரம் செய்த கடவுளை
  • கூடுதி ஏல் - சேர வேண்டுமென்று விரும்பினையானால்
  • கொடிது ஆய - கொடுமை உள்ளதாகிய
  • குத்திரம் - இழி குணத்தைக் கொண்ட
  • கூடு - இந்தச் சரீரத்தை
  • அங்கி - அக்னியானது
  • கொளுந்தா முன் - எரித்து விடுதற்கு முன்னமே
  • கோவிந்தன் - கோவிந்தராஜன் எழுந்தருளி இருக்கின்ற
  • சித்திரகூடம் - திருச்சித்திரகூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • கருதி - நினைத்து
  • செல் - செல்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment