||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 1
குலசேகராழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 741 - பெருமாள் திருமொழி - 10.1
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும்*
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை*
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை*
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே|
002. திவ்ய ப்ரபந்தம் - 742 - பெருமாள் திருமொழி - 10.2
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி*
வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி*
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து*
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே|
003. திவ்ய ப்ரபந்தம் - 743 - பெருமாள் திருமொழி - 10.3
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு*
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை*
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 744 - பெருமாள் திருமொழி - 10.4
தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால்*
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப்*
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*
சித்திரகூடத்து இருந்தான் தன்னை*
இன்று தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எத்தனையும் கண் குளிரக் காணப் பெற்ற*
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே|
005. திவ்ய ப்ரபந்தம் - 745 - பெருமாள் திருமொழி - 10.5
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று*
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி*
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி*
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி*
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார்*
திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே|
006. திவ்ய ப்ரபந்தம் - 746 - பெருமாள் திருமொழி - 10.6
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை*
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 747 - பெருமாள் திருமொழி - 10.7
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 748 - பெருமாள் திருமொழி - 10.8
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*
அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்*
இன்னமுதம் மதியோமின்றே|
009. திவ்ய ப்ரபந்தம் - 749 - பெருமாள் திருமொழி - 10.9
செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று*
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த*
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட*
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம்*
மற்று உறுதுயரம் அடையோம் இன்றே|
010. திவ்ய ப்ரபந்தம் - 750 - பெருமாள் திருமொழி - 10.10
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்று*
இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி*
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே|
011. திவ்ய ப்ரபந்தம் - 751 - பெருமாள் திருமொழி - 10.11
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று*
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்*
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே|
திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1158 - பெரிய திருமொழி - 3.2.1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1159 - பெரிய திருமொழி - 3.2.2
காயோடு நீடு கனி உண்டு* வீசு கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1160 - பெரிய திருமொழி - 3.2.3
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*
படை மன்னவன் பல்லவர்க் கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1161 - பெரிய திருமொழி - 3.2.4
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி*
நும் தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*
கவை நா அரவின்-அணைப் பள்ளியின் மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1162 - பெரிய திருமொழி - 3.2.5
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக்*
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப்*
புகழ் மங்கை எங்கும் திகழ*
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment