||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்வேத வராஹம்||
||ஓம் நமோ நாராயணா||
ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்
ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு
பிரமனின் ஒரு நாள் பொழுது நீளும் நமக்கு
இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்
ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்
ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்
முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள்
சென்று அடைக்கலம் புகுவர் ஞானவுலகில்
மரம் செடி கொடி ஜீவராசிகள் அனைத்தும்
எரிந்து சாம்பலாகி விடும் அதீத உஷ்ணத்தில்
தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு
அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில்
கொட்டும் கன மழை பூமியின் மேற்பரப்பு அதிர
கெட்டிப் பட்டு பூமி பதிந்து விடும் பாதாளத்தில்
பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால்
தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்
வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை
படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்
வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு
வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை
பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்
தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம்
ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்
தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே
தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்
கூரிய நகங்களாலும் கோரைப் பற்களாலும்
கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்
ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி
ஜல ப்ரவாஹம் ஆகி விடும் செந்நீராக அப்போது
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment