About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.93

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.93

ந சாபி க்ஷுத்³ ப⁴யம் தத்ர
ந தஸ்கர ப⁴யம் ததா²|
நக³ராணி ச ராஷ்ட்ராணி
த⁴நதா⁴ந்ய யுதாநி ச|| 

  • தத்ர - அங்கு
  • க்ஷுத்³ ப⁴யம் அபி - பசியால் உண்டாகிற பயமும்
  • ந - இல்லை
  • ததா² - அப்படியே
  • தஸ்கர ப⁴யம் ச - திருடர்களுடைய பயமும்
  • ந - இல்லை
  • நக³ராணி ச - பட்டணங்களும்
  • ராஷ்ட் ராணி ச - தேசங்களும்
  • த⁴ந தா⁴ந்ய - தன தானியங்களோடு
  • யுதாநி - கூடினவைகளாக ஆயின
பசி பயமோ, கள்வர் பயமோ ஒரு போதும் இருக்காது. நகரங்களிலும், ராஷ்டிரங்களிலும், மாநிலங்களிலும் தனமும், செல்வமும், தானியங்களும் பெருகியிருக்கும்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment