About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.22 

ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம் 
த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
நாந வாப்த மவாப் தவ்யம் 
வர்த ஏவ ச கர்மணி||

  • ந - ஏதுமில்லை 
  • மே - எனது 
  • பார்த² - பிருதாவின் மகனே 
  • அஸ்தி - இருக்கிறது 
  • கர்தவ்யம் - விதிக்கப்பட்ட கடமை 
  • த்ரிஷு - மூன்று 
  • லோகேஷு- உலகங்களிலும்  
  • கிஞ்சந - எதுவும் 
  • ந - இல்லை  
  • அநவாப்தம் - தேவையானது  
  • அவாப்தவ்யம் - அடைய வேண்டியது 
  • வர்தே - ஈடுபட்டுள்ளேன்  
  • ஏவ - நிச்சயமாக  
  • ச - மேலும்  
  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமையில்

பார்த்தா! மூன்று உலகங்களிலும் எனது விதிக்கப்பட்ட கடமைகள் ஏதுமில்லை. எனக்கு, தேவையானதும் அடைய வேண்டியதும் எதுவும் இல்லை. இருப்பினும் நான் கடமையில் ஈடுபட்டுள்ளேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment