About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.15

ஜுகு³ப் ஸிதம் த⁴ர்ம க்ருதே நுஸா² ஸத:
ஸ்வபா⁴வ ரக் தஸ்ய மஹாந் வ்யதிக்ரம:|
யத்³ வாக்யதோ த⁴ர்ம இதீதர: ஸ்தி²தோ
ந மந்யதே தஸ்ய நிவாரணம் ஜந:||

  • ஸ்வபா⁴வ ரக் தஸ்ய - இயற்கையிலேயே விஷயாதிகளில் பற்று கொண்ட மனிதனுக்கு
  • த⁴ர்ம க்ருதே - தர்மத்தின் பொருட்டு
  • ஜுகு³ப் ஸிதம் - நிந்திக்க தகுந்தவைகளான காம்ய கர்மாக்களை
  • அநுஸா² ஸதஹ - உபதேசம் செய்கின்ற தங்களுக்கே
  • மஹாந் வ்யதிக்ரமஹ - பெரிய தப்பிதம் ஏற்பட்டிருக்கிறது
  • யத்³ வாக்யதோ - தங்களின் வாக்கியத்தில் இருந்து
  • த⁴ர்ம இதி - இது தான் முக்கிய தர்மம் என்று
  • இதரஸ் ஜநஹ - சாதாரண மனிதன் ஒருவன்
  • ஸ்தி²தோ - நம்பி விடுகிறான்
  • தஸ்ய - அவனுக்கு
  • நிவாரணம் - காம்ய கர்மாக்களில் இருந்து உம்மாலோ மற்றவர்களாலோ செய்யப்படும் தடையை
  • ந மந்யதே - அவன் உண்மை என்று எண்ணுவதில்லை

விலக்கத்தக்க கர்மாக்களைச் செய்வதில், மனிதனின் மனம் இயல்பாகவே ஈடுபடுகிறது. தாங்கள், தர்ம காரியம் என்ற பெயரில் விலங்குகளைப் பலியிடுதல் போன்ற வெறுக்கத்தக்க சில காம்ய கர்மாக்களைச் செய்ய அனுமதித்தீர்கள். ஆனால், நிலைமை முற்றிலும் எதிராக மாறி விட்டது. மந்த புத்தியாளர்கள், தாங்கள் முன்னர் கூறிய தர்மங்களையே உறுதியாகப் பற்றிக் கொண்டுவிட்டார்கள். அது தவறு என்று யார் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment