About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 5

வஸுதே³ வஸுதம் தே³வம், 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம், 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் - வசுதேவரின் குமாரனான
  • தே³வம் - திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை
  • கம்ஸ - கம்சனையும்
  • சாணூர: சாணூரன் என்ற அரக்கனையும்
  • மர்த³னம் - வதம் செய்தவனை, அழித்தவனை
  • தே³வகீ - தேவகி தேவிக்கு
  • பரமானந்த³ம் - அளவற்ற மட்டற்ற மகிழ்ச்சியைத் தருபவனை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ கு³ரும் - அகில உலகத்திற்கும் குருவானவனை

வசுதேவரின் புத்திரனும், கம்சன் மற்றும் சாணூரனை அழித்தவனும், தேவகி தேவிக்கு பேரானந்தத்தை அளிப்பவனுமாகிய அகில உலகத்திற்கும் குருவான திவ்ய பிரகாசம் பொருந்திய இறைவனை, ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment