||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 4
ஸர்வோ பனிஷதோ³ கா³வோ,
தோ³க்³தா⁴ கோ³பால னந்த³ன꞉|
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர் போ⁴க்தா,
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||
- ஸர்வோ - எல்லா
- உபநிஷதோ³ - உபநிடதங்களும்
- கா³வோ - பசுக்கள்
- தோ³க்³தா⁴ - பால் கறப்பவர்
- கோ³பால நந்த³னஹ - கோபாலனின் மகனான கிருஷ்ணர்
- பார்தோ² - அர்ஜுனன்
- வத்ஸஸ் - கன்றுக்குட்டி
- ஸுதீ⁴ர் - தூய புத்தியுடையவர்கள், அறிஞர்கள்
- போ⁴க்தா - அதனை அருந்துபவர்கள்
- து³க்³த⁴ம் - கறந்த பால்
- கீ³தா அம்ருதம் - கீதையாகிய அமிர்தம்
- மஹத் - மிக உயர்ந்தது, மகத்தானது
எல்லா உபநிடதங்களும் பசுக்கள் போன்றவையாகும். பால் கறப்பவர் நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். அர்ஜுனன் கன்றுக்குட்டி ஆவார். தூய புத்தியுடைய அறிஞர்கள் அந்தப் பாலை அருந்துபவர்கள் ஆவர். கறக்கப்பட்ட மகா உன்னதமான பால், கீதையாகிய அமிர்தம் ஆகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment