About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 12 November 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.8

ஶ்ரீ நாரத³ உவாச!
ப⁴வதாநுதி³த ப்ராயம்
யஸோ² ப⁴க³வதோ மலம்|
யேநைவா ஸௌ ந துஷ்யேத
மந்யே தத்³ த³ர்ஸ²நம் கி²லம்||

  • ஶ்ரீ நாரத³ உவாச! - நாரதர் சொல்கிறார் 
  • ப⁴க³வத - ஸ்ரீ பகவானான வாஸுதேவனின்
  • அமலம் யஸோ² - பரிசுத்தமான கீர்த்தியானது
  • ப⁴வதா - தங்களால்
  • அநுதி³த ப்ராயம் - சொல்லப்படாதது போல் தான் இருக்கிறது. (வெறும் வேதங்களாலும் கேவல தர்மாதிகளாலும் பிரயோஜனம் இல்லை)
  • யேந ஏவ - எந்த இறைவன் கீர்த்தியைச் சொல்லாத மற்ற தருமாதி ஞானத்தால்
  • அஸௌ - அந்த வாஸுதேவன்
  • ந துஷ்யேத - மகிழ்ச்சி அடைய மாட்டாரோ
  • தத்³ த³ர்ஸ²நம் - அப்படி அவரது கீர்த்தி சொல்லப்படாத ஸாஸ்திரத்தை 
  • கி²லம் மந்யே - மட்டமாகவே எண்ணுகிறேன்

நாரதர் கூறுகிறார் - பகவான் வாசுதேவனின் நிர்மலமான நாம ரூப லீலா குண மாதுர்யத்தைத் தாங்கள் பெரும்பாலும் வர்ணிக்கவில்லையே! ஆகவே பகவானும், தங்களுடைய சித்தமும் மகிழ்ச்சியுறவில்லை. எந்த சாஸ்திரத்தினால் பகவான் சந்தோஷம் அடையவில்லையோ, எந்த சாஸ்திரத்தில் பகவானுடைய நிர்மலமான நாமரூப லீலா குண மாதுர்யங்கள் விவரிக்கப் படவில்லையோ, அவையெல்லாம் ஏற்கத் தக்கவை அல்ல.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment