About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 8


  • மூகம் - வாய் பேசாதவரை
  • கரோதி  - செய்கிறது, மாற்றுகிறது
  • வாசாலம்  - சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவராக
  • பங்கு³ம் - நடக்க முடியாதவரை 
  • லங்க⁴யதே - கடக்க வைக்கிறது, தாண்ட வைக்கிறது
  • கி³ரிம்  - மலையை
  • யத் க்ருபா - யாருடைய கருணையானது, அருளானது 
  • தம் அஹம் - அவரை நான் 
  • வந்தே³  - வணங்குகிறேன், போற்றுகிறேன்
  • பரமானந்த³ - எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும்
  • மாத⁴வம் - அந்த மாதவனை, ஸ்ரீ கிருஷ்ணரை 

யாருடைய கருணையானது, வாய் பேச முடியாதவனையும் சரளமாகப் பேச வைக்கிறதோ; நடக்க முடியாதவனையும் உயர்ந்த மலையைக் கடக்க வைக்கிறதோ; அந்த எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும் மாதவனை (ஸ்ரீ கிருஷ்ணரை) நான் மனதார வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment