||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 1
ஓம் ஸு²க்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும்
ஸ²ஸி² வர்ணம் சதுர்பு⁴ஜம்|
ப்ரஸந்ந வத³நம் த்⁴யாயேத்
ஸர்வ விக்⁴நோப ஸா²ந்தயே||
- ஓம் - பரம்பொருளைக் குறிக்கும் பிரணவ மந்திரம்
- ஸு²க்லாம் - வெண்மையான (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை)
- ப³ரத⁴ரம் - ஆடையை அணிந்தவர், ஆடை தரித்தவர்
- விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
- ஸ²ஸி² வர்ணம் - சந்திரனைப் போன்ற வெண்மை நிறம் உடையவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
- சதுர் பு⁴ஜம் - நான்கு கரங்கள் உடையவர்
- ப்ரஸந்ந - தெளிவான, மகிழ்ச்சியான
- வத³நம் - அழகிய திருமுகத்தை உடையவர்
- த்⁴யாயேத் - தியானிக்க வேண்டும்
- ஸர்வ - அனைத்து
- விக்⁴ந - தடைகள், இடையூறுகள்
- உபஸா²ந்தயே - அமைதியடைய, நீங்குவதற்காக
எங்கும் நிறைந்திருப்பவரும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்திருப்பவரும், முழு நிலவைப் போன்ற குளிர்ந்த பிரகாசமான திருமேனியைக் கொண்டவரும், நான்கு கரங்களை உடையவரும், எப்போதும் அருள் பொழியும் மலர்ந்த முகத்தைக் கொண்டவருமான இறைவனை, நாம் தொடங்கும் காரியங்களில் ஏற்படும் அனைத்துத் தடைகளும் நீங்கி, அவை தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறுவதற்காக நம் மனதில் எப்போதும் தியானிப்போமாக.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment