||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திருவாதிரை நக்ஷத்திரம்
ஸ்ரீ ஆட்கொண்டவில்லி ஜீயர்
(வகுளாபரணர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - திருவாதிரை
தனியன்
ஜ்ஞாந வைராக்ய ஸம்பந்நம்
ராமாநுஜ பதாச்ரிதம்|
சதுர்த்தாஸ்ரம ஸம்மந்தம்
ஸம்ய மீந்தரம் நாம் யஹம்||
ராமானுஜரால் நிறுவப்பட்ட 74 சிம்மாசனங்களில் ஒருவர், ஞானம் மற்றும் வைராக்கியம் நிறைந்தவர், வகுளாபரணர் என்ற திருநாமம் கொண்டவர்; சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர். இவர் நஞ்சீயரை சந்தித்து மரியாதை செய்த நிகழ்வும், நம்பெருமாளை சேவிக்க வந்ததும் ஆன்மீக வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன.
பெருமாளை சேவித்து விட்டு வருகிறார் நஞ்சீயர். ஆட்கொண்ட வில்லி ஜீயரும் எதிரே வருகிறார். இருவரும் எதிர் எதிரே சந்தித்துக் கொள்கிறார்கள். நஞ்சியர் யோசிக்காமல் ஆட்கொண்ட வில்லி ஜீயரின் காலில் விழுந்து தண்டன் சமர்ப்பிக்கிறார். ஆட்கொண்ட வில்லி ஜீயர் நடுங்கி போய், 'அடியேன் ஒரு அபராதி. இவ்வளவு நாள் பகவத் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தது எல்லாம் பொய். பகவத் சம்பந்தம் எப்போது உறுதியாகிறது என்றால் ஒரு அடியாரை பார்க்கும் பொழுது கீழே விழும் போது தான் இது தான் மெய். உம்மை போல எனக்கு சட்டு என்று விழ தோன்றவில்லையே அடியேனுக்கு முன் நீர் விழுந்து விட்டீரே!' என்று வருத்தப்பட்டாராம். அதற்கு நஞ்சீயர், 'அப்படியெல்லாம் இல்லை. நீர் எம்பெருமானாரின் ஸிஷ்யர். மற்றவர்களுக்கு ஆசிரியராக இருக்கிறீர்' என்று சமாதானம் செய்தாராம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment