About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 26 November 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.20 

கர்மணைவ ஹி ஸம் ஸித்³தி⁴ம்
ஆஸ்தி²தா ஜநகா த³ய:|
லோக ஸங்க்³ரஹ மேவாபி 
ஸம்பஸ்²யந் கர்து மர்ஹஸி||

  • கர்மணா - செயலால் 
  • ஏவ - கூட 
  • ஹி - நிச்சயமாக 
  • ஸம் ஸித்³திம் - பக்குவத்தில் 
  • ஆஸ்தி²தா - நிலைபெற்றனர் 
  • ஜநகா த³யஹ - ஜனகரைப் போன்ற மன்னர்கள்  
  • லோக ஸங்க்³ரஹம் - பொது மக்கள்  
  • ஏவ அபி - மேலும் 
  • ஸம்பஸ்²யந் - கருதி 
  • கர்தும் - செயல்பட 
  • அர்ஹஸி - வேண்டியவன் நீ

ஜனகரைப் போன்ற மன்னர்களும் கூட செயலால் பக்குவத்தில் சித்தி பெற்றனர். மேலும், உலக நன்மைக்காக கடமையைச் செய்ய வேண்டியன் நீ.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment