||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 2
திருமங்கையாழ்வார்
017. திவ்ய ப்ரபந்தம் - 1163 - பெரிய திருமொழி - 3.2.6
நெய் வாய் அழல் அம்பு துரந்து*
முந்நீர் துணியப் பணி கொண்டு அணி ஆர்ந்து*
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ் வாய் இள மங்கையர் பேசவும்*
தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
018. திவ்ய ப்ரபந்தம் - 1164 - பெரிய திருமொழி - 3.2.7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1165 - பெரிய திருமொழி - 3.2.8
மா வாயின் அங்கம் மதியாது கீறி*
மழை மா முது குன்று எடுத்து*
ஆயர் தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்*
நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதி*
தேவாதி தேவன் திகழ்கின்ற*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1166 - பெரிய திருமொழி - 3.2.9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச்*
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர்*
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*
எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற*
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|
021. திவ்ய ப்ரபந்தம் - 1167 - பெரிய திருமொழி - 3.2.10
தில்லைத் திருச்சித்ர கூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*
அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*
குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*
பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே|
022. திவ்ய ப்ரபந்தம் - 1168 - பெரிய திருமொழி - 3.3.1
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|
023. திவ்ய ப்ரபந்தம் - 1169 - பெரிய திருமொழி - 3.3.2
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்*
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடி*
தே மலர் தூவ வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
024. திவ்ய ப்ரபந்தம் - 1170 - பெரிய திருமொழி - 3.3.3
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
025. திவ்ய ப்ரபந்தம் - 1171 - பெரிய திருமொழி - 3.3.4
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாட*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
026. திவ்ய ப்ரபந்தம் - 1172 - பெரிய திருமொழி - 3.3.5
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
027. திவ்ய ப்ரபந்தம் - 1173 - பெரிய திருமொழி - 3.3.6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
028. திவ்ய ப்ரபந்தம் - 1174 - பெரிய திருமொழி - 3.3.7
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து*
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|
029. திவ்ய ப்ரபந்தம் - 1175 - பெரிய திருமொழி - 3.3.8
பொங்கி அமரில் ஒருகால்* பொன் பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்*
சிங்க உருவின் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
030. திவ்ய ப்ரபந்தம் - 1176 - பெரிய திருமொழி - 3.3.9
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்*
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|
031. திவ்ய ப்ரபந்தம் - 1177 - பெரிய திருமொழி - 3.3.10
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன் மருவார்*
ஊன் அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார் மேல்* சாரா தீவினை தானே|
032. திவ்ய ப்ரபந்தம் - 2777 - பெரிய திருமடல் - 7.5 (65)
அள்ளல் வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை*
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment