||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1318 - பெரிய திருமொழி - 4.8.1
கவள யானைக் கொம்பு ஒசித்த* கண்ணன் என்றும் காமரு சீர்க்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1319 - பெரிய திருமொழி - 4.8.2
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1320 - பெரிய திருமொழி - 4.8.3
அண்டர் கோன் என் ஆனை என்றும்*
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும்*
நான்மறைகள் தேடி ஓடும்* செல்வன் என்றும்*
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி*
பண்டு போல் அன்று என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1321 - பெரிய திருமொழி - 4.8.4
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம் முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1322 - பெரிய திருமொழி - 4.8.5
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும்*
மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை*
நின்மலன் தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1323 - பெரிய திருமொழி - 4.8.6
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்*
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*
தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1324 - பெரிய திருமொழி - 4.8.7
நாடி என் தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்*
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச்*
செல்வன் என்றும்* சிறை கொள் வண்டு சேடு உலவு*
பொழில் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்லடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1325 - பெரிய திருமொழி - 4.8.8
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*
தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*
தேவ தேவன் என்று என்று ஓதி* பலரும் ஏச என் மடந்தை*
பார்த்தன் பள்ளி பாடுவாளே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1326 - பெரிய திருமொழி - 4.8.9
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1327 - பெரிய திருமொழி - 4.8.10
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன் பள்ளிச் செங்கண் மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment