About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||024. திருசிறுப்புலியூர்||
||திருவாரூர்|| 
||இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1628 - பெரிய திருமொழி - 7.9.1
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக் கழல் தொழுவீர்*
வெள்ளம் முது பரவைத்* திரை விரிய* 
கரை எங்கும் தெள்ளும் மணி திகழும்* 
சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும்* 
எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளீரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1629 - பெரிய திருமொழி - 7.9.2
தெருவில் திரி சிறு நோன்பியர்* செஞ் சோற்றொடு கஞ்சி மருவி* 
பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்து அடைவீர்*
திருவில் பொலி மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள் அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1630 - பெரிய திருமொழி - 7.9.3
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்* பணியும் சிறு தொண்டீர்*
அறையும் புனல் ஒருபால் வயல்* ஒரு பால் பொழில் ஒரு பால்*
சிறை வண்டு இனம் அறையும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும்* 
இறை அடி அல்லது* ஒன்று இறையும் அறியேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1631 - பெரிய திருமொழி - 7.9.4
வான் ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான் ஆகிய தலைவன் அவன்* அமரர்க்கு அதிபதி ஆம்*
தேன் ஆர் பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆன் ஆயனது* 
அடி அல்லது* ஒன்று அறியேன் அடியேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1632 - பெரிய திருமொழி - 7.9.5
நந்தா நெடு நரகத்திடை* நணுகா வகை* 
நாளும் எந்தாய் என* இமையோர் தொழுது ஏத்தும் இடம்* 
எறி நீர்ச் செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம் தாமரை அடியாய்* உனது அடியேற்கு அருள் புரியே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1633 - பெரிய திருமொழி - 7.9.6
முழு நீலமும் மலர் ஆம்பலும்* அரவிந்தமும் விரவி*
கழுநீரொடு மடவார் அவர்* கண் வாய் முகம் மலரும்*
செழு நீர் வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழு நீர்மை அது உடையார்* அடி தொழுவார் துயர் இலரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1634 - பெரிய திருமொழி - 7.9.7
சேய் ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா* 
எனக்கு உரையாய் இது* மறை நான்கின் உளாயோ?*
தீ ஓம்புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ?* 
உனது அடியார் மனத்தாயோ?* அறியேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1635 - பெரிய திருமொழி - 7.9.8
மை ஆர் வரி நீலம்* மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உன கழலே* தொழுது எழுவேன்* 
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐ வாய் அரவு அணை மேல்* உறை அமலா அருளாயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1636 - பெரிய திருமொழி - 7.9.9
கரு மா முகில் உருவா* கனல் உருவா புனல் உருவா*
பெரு மால் வரை உருவா* பிற உருவா நினது உருவா*
திரு மா மகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அரு மா கடல் அமுதே* உனது அடியே சரண் ஆமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1637 - பெரிய திருமொழி - 7.9.10
சீர் ஆர் நெடு மறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை* இமையோர் பெருமானை*
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை* கலியன் ஒலி மாலை*
பாரார் இவை பரவித் தொழப்* பாவம் பயிலாவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment