||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||007. திருக்கண்டியூர்||
||த்ரிமூர்த்தி க்ஷேத்ரம்
– பஞ்ச கமல க்ஷேத்திரம் - தஞ்சாவூர்||
||ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||
||ஸ்ரீ ஹர சாப விமோச்சன பெருமாள் திருக்கோயில்||
||ஸ்ரீ கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோச்சன பெருமாள்||
||திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர் - ஹர சாப விமோச்சனன்
- பெருமாள் உற்சவர் - கமலநாதன்
- தாயார் மூலவர் - கமலவல்லி
- திருமுக மண்டலம் திசை - கிழக்கு
- திருக்கோலம் - நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம் - கமல, கபால மோட்ச, பத்ம, கதா
- விமானம் - கமலாக்ருதி
- ஸ்தல விருக்ஷம் - மா
- ப்ரத்யக்ஷம் - அகஸ்தியர், ருத்ரன்
- ஆகமம் - வைகாநஸம்
- ஸம்ப்ரதாயம் - தென் கலை
- மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
- பாசுரங்கள் - 1
----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடி கொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள் பாலிக்கிறார். "ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.
சிவனுக்கு ஈசானம், தத் புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத் தலையை கிள்ளி எறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் ஸமேத ஹர சாப விமோசனப் பெருமாள் கோயில். கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் என ஐந்து கமலங்கள் உள்ளதால், பஞ்ச கமல க்ஷேத்திரம் என்றாயிற்று.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்


No comments:
Post a Comment