||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் -1.1.12
த⁴ர்மஜ்ஞ: ஸத்யஸந்த⁴ஸ்²ச
ப்ரஜாநாம் ச ஹிதே ரத:|
யஸ²ஸ்வீ ஜ்ஞாந ஸம்பந்ந:
ஸு²சிர்வஸ்²ய: ஸமாதி⁴மாந்||
- த⁴ர்மஜ்ஞஸ் - தர்மம் அறிந்தவர்
- ஸத்ய ஸந்த⁴ஸ்²ச - ஸத்யமான பிரதிக்ஞை உடையவர்
- ப்ரஜா நாம் - பிராணிகளுடைய
- ஹிதே - நன்மையில்
- ரதஹ ச - நோக்கம் உடையவர்
- யஸ²ஸ்வீ - கீர்த்தி உடையவர்
- ஜ்ஞாந ஸம்பந்நஹ - ஞானம் நிறைந்த பேரறிவாளர்
- ஸு²சிர் - பரிசுத்தர்
- வஸ்²யஸ் - தம்மை அடைந்தவர்களுக்கு வசப்பட்டு நடப்பவர்
- ஸமாதி⁴ மாந் - கவனம் நிறைந்தவர்
அவர் அறம் அறிந்தவராகவும், வாய்மையில் அர்ப்பணிப்பு உள்ளவராகவும் (சத்ய சந்தனாகவும்), குடிமக்களின் நன்மையில் நாட்டமுள்ளவராகவும், புகழ் பெற்றவராகவும், விவேகம் உள்ளவராகவும், ஒழுக்கத்தில் தூய்மையானவராகவும், தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், கவனம் நிறைந்தவராகவும் இருக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment