||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||008. திருக்கூடலூர்||
||ஸங்கம க்ஷேத்திரம் - ஆடுதுறை - கும்பகோணம்||
||எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1358 - பெரிய திருமொழி - 5.2.1
தாம் தம் பெருமை அறியார்*
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர் போல்*
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1359 - பெரிய திருமொழி - 5.2.2
செறும் திண்* திமில் ஏறு உடைய*
பின்னை பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர் போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1360 - பெரிய திருமொழி - 5.2.3
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு*
அடியேன் உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
கள்ள நாரை* வயலுள்*
கயல்மீன் கொள்ளை கொள்ளும்* கூடலூரே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1361 - பெரிய திருமொழி - 5.2.4
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்*
நிலம் நீர் ஏற்றான் எந்தை* பெருமான் ஊர் போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1362 - பெரிய திருமொழி - 5.2.5
தொண்டர் பரவச்* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர் போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1363 - பெரிய திருமொழி - 5.2.6
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர் போல்*
எக்கல் இடு* நுண் மணல்மேல்*
எங்கும் கொக்கின் பழம் வீழ்* கூடலூரே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1364 - பெரிய திருமொழி - 5.2.7
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல*
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1365 - பெரிய திருமொழி - 5.2.8
கலை வாழ்* பிணையோடு அணையும்*
திருநீர்மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்*
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று*
இளநீர்க் குலை தாழ் கிடங்கின்* கூடலூரே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1366 - பெரிய திருமொழி - 5.2.9
பெருகு காதல் அடியேன்*
உள்ளம் உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
அருகு கைதை மலர*
கெண்டை குருகு என்று அஞ்சும்* கூடலூரே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1367 - பெரிய திருமொழி - 5.2.10
காவிப் பெருநீர் வண்ணன்*
கண்ணன் மேவித் திகழும்* கூடலூர் மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட பாவம் போமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment