About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 April 2022

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். 

1. வஸுதே³வ ஸுதம் தே³வம் 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் – வசுதேவரின் குமாரனும், மகனும் 
  • தே³வம்  – ஒளிமயமான இறைவனும்
  • கம்ஸ சாணூர மர்த³னம் – கம்சன், சாணூரன் ஆகிய அரக்கர்களை அழித்தவரும்
  • தே³வகீ பரமானந்த³ம் – தாய் தேவகிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருபவரும்
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாகிய

  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம், 
ஹார நூபுர ஸோ²பிதம்|  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே³ஜக³த்³ கு³ரும்||

  • அதஸீ புஷ்ப – காயாம்பூ
  • ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
  • ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
  • நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
  • ஸோ²பிதம்  – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
  • ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
  • கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
  • கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்

  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

3. குடிலாலக ஸம்யுக்தம் 
பூர்ண சந்த்³ர நிபா⁴னனம்| 
விலஸத் குண்ட³ல த⁴ரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • குடில அலக - சுருட்டைத் தலை முடியுடன்
  • ஸம்யுக்தம் - கூடிய அழகு பொருந்தியவனை
  • பூர்ண சந்த்³ர - முழு நிலவைப் போன்ற
  • நிப⁴ ஆநநம் - ஒளிரும் திருமுகத்தை உடையவனை
  • விலஸத் - பளீர் என ஒளி வீசும், பிரகாசிக்கும்
  • குண்ட³ல - காதணிகளை
  • த⁴ரம் - தரித்திருப்பவனை, அணிந்திருப்பவனை
  • க்ருஷ்ணம் - கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்

  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

4. மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம் 
சாரு ஹாஸம் சதுர் பு⁴ஜம்|
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • மந்தா³ர - மந்தாரை மலர்களின்
  • க³ந்த⁴ - நறுமணத்தை
  • ஸம்யுக்தம் - கொண்டிருப்பவரை
  • சாரு - அழகான, கொள்ளை கொள்ளும்
  • ஹாஸம் - புன்னகையை உடையவரை
  • சதுர் - நான்கு
  • பு⁴ஜம் - தோள்களை, கரங்களை உடையவரை
  • ப³ர்ஹி - மயிலின்
  • பிஞ்சா² - தோகையை
  • அவசூடா³ - தலையில் சூடிய முடிக்கு
  • அங்க³ம் - ஆபரணமாகக் கொண்டவரை
  • க்ருஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

5. உத்பு²ல்ல பத்³ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸன்னிப⁴ம்|
யாத³வானாம் ஸி²ரோரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • உத்பு²ல்ல – மலர்ந்த, விரிந்த
  • பத்³ம – தாமரை
  • பத்ர – இதழ்
  • அக்ஷம் – கண்களை உடையவரை
  • நீல – நீல நிறமுள்ள
  • ஜீமூத – மேகத்திற்கு
  • ஸன்னிப⁴ம் – ஒப்பானவரை, சமமானவரை
  • யாதவா³னாம் – யாதவ குலத்தில் பிறந்தவர்களுள்
  • ஸி²ரோ ரத்னம் – தலையாய ரத்தினம் போன்றவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கு³ரும் - குருவாக இருப்பவரைமலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

6. ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் 
பீதாம்ப³ர ஸுஸோ²பி⁴தம்|
அவாப்த துலஸீ க³ந்த⁴ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • ருக்மிணீ - ருக்மிணியுடன்
  • கேளி - லீலைகள், விளையாட்டுகளில்
  • ஸம்யுக்தம் - இணைந்திருப்பவரை
  • பீதாம்ப³ர - மஞ்சள் நிற ஆடையும்
  • ஸுஸோ²பி⁴தம் - மிக அழகாக விளங்குபவரை
  • அவாப்த - பெற்ற, கொண்டிருப்பவரை
  • துலஸீ - துளசியின்
  • க³ந்த⁴ம் - நறுமணத்தை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

7. கோ³பிகானாம் குசத்³ வந்த³ 
குங்குமாங்கித வக்ஷஸம்|
ஶ்ரீநிகேதம் மஹேஷ் வாஸம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • கோ³பிகானாம் - கோபிகைகளின், ஆயர்பாடி பெண்களின்
  • குசத்³ வந்த³ - இரு தனங்களில், மார்பகங்களில் பூசப்பட்ட
  • குங்கும அங்கித - குங்குமக் குழம்பின் சுவடுகள் பதிந்த
  • வக்ஷஸம் - மார்பினை உடையவரை
  • ஶ்ரீநிகேதம் - மஹாலக்ஷ்மி தேவியின் நிரந்தர இருப்பிடமாக விளங்குபவரை
  • மஹேஷ் வாஸம் - சிறந்த வில்லாளியை, மஹா விஷ்ணுவின் பிரகாசமான வடிவத்தைக் கொண்டவரை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

8. ஶ்ரீவத் ஸாங்கம் மஹோரஸ்கம் 
வனமாலா விராஜிதம்|
ஸ²ங்க² சக்ர த⁴ரம் தே³வம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும்||

  • ஶ்ரீ வத்ஸ அங்கம் - ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை, அடையாளத்தை உடலில் கொண்டவர்
  • மஹா உரஸ்கம் - பரந்த, விசாலமான மார்பை உடையவர்
  • வனமாலா - காட்டு மலர்களால் ஆன மாலையினால், வைஜயந்தி மாலையினால்
  • விராஜிதம் - பிரகாசிப்பவர், அழகுடன் விளங்குபவர்
  • ஸ²ங்க - பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்
  • சக்ர - சுதர்சனம் என்னும் சக்கரத்தையும்
  • த⁴ரம் - கைகளில் ஏந்தியிருப்பவர்
  • தே³வம் - தெய்வீக ஒளி பொருந்திய இறைவனை
  • கிருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ணரை 
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே

ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

பலச்ருதி 

9. க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம் 
ப்ராத ருத்தா²ய ய: படே²த்|
கோடி ஜன்ம க்ருதம் பாபம் 
ஸ்மரணேன வினஸ்²யதி||

  • க்ருஷ்ணாஷ்டகம் - கிருஷ்ணனைப் போற்றும் இந்த எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்லோகத்தை
  • இ³தம் - இந்த 
  • புண்யம் - புண்ணியத்தைத் தரக்கூடிய, தூய்மையான
  • ப்ராதஹ் - அதிகாலை வேளையில்
  • உத்தா²ய - படுக்கையிலிருந்து எழுந்து
  • யஹ் - எவர் ஒருவர்
  • படே²த் - படிக்கிறாரோ, பாராயணம் செய்கிறாரோ
  • கோடி - கோடி
  • ஜன்ம - பிறவிகளில்
  • க்ருதம் - செய்யப்பட்ட
  • பாபம் - பாவங்கள் அனைத்தும்
  • ஸ்மரணேன - இறைவனை நினைப்பதன் மூலமே
  • வினஸ்²யதி - அழிகிறது, நசித்துப் போகிறது

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment